India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த திருமலைக்குமார் தனது மனைவி ராஜலட்சுமியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டபோது ஆத்திரத்தில் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தார். கொலை செய்துவிட்டு கட்டைப் பையுடன் அசால்டாக சென்ற திருமலைக்குமார் சாத்தூர் நீதிமன்றத்தில் சரணடைய சென்ற போது அங்கிருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்து சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களை அரசு அங்கீகாரம் பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள் அனுகி அவர்களை சேர்ப்பதாகவும், ஒரு சில ஆசிரியர்களே மாணவர்களின் விவரங்களை கல்லூரிகளுக்கு தருவதாகவும் புகார் எழுந்துள்ளது. மாணவர்களின் விவரங்களை அளிப்பதோ, சேர்ப்பதோ, கல்லூரி மாணவர்களை நேரடியாக அணுகினாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் வெளியிட்டுள்ள 32438 பல்வேறு பணிக் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை பயிற்சி வகுப்பு பிப்.17 அன்று ஸ்ரீ வித்யா கல்லூரியில் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <

விருதுநகர் சின்னவாடியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 2 பெண்கள் உள்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து, மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு பாஜக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் அனைவரும் விரைவாக நலம் பெற இறைவனை வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு யூனியன்களில் பணிபுரியும் எட்டு பிடிஓக்கள் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சிவகாசி பிடிஓவாக வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய மீனாட்சி நியமிக்கப்பட்டுள்ளார். ராஜபாளையம் பிடிஓ ஜெயராமன் காரியாபட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் பிடிஓ ராமமூர்த்தி வத்திராயிருப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி அருகே இனாவிலக்கு மதுநாதபேரி குளம் அருகே நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் மர்ம கார் ஒன்று அப்பகுதியில் சென்றது தெரியவந்தது. அதில் சிவகாசியை சேர்ந்த இளம்பெண்னை அவரது கணவர் கொலை செய்து காரில் தென்காசி கொண்டு வந்து எரித்தது தெரியவந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் கீழ ராஜகுலராமன் அருகே பழைய சென்னிகுளத்தை சேர்ந்தவர் பாண்டி சுரேஷ். இவரது மகனான பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் பாண்டியராஜா வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை தானாகவே இயக்கிக் கொண்டு அட்டை மில் முக்கு ரோட்டிற்கு சென்றார். அப்போது நிலைதடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த பாண்டியராஜா பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணை.

விருதுநகர் அருகே இ.குமாரலிங்கபுரம் பகுதியில் கனிம வளக் கொள்ளையை தடுக்கத் தவறிய சாத்தூர் தாசில்தார் உள்ளிட்ட 4 வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை உதவி பொறியாளர் மற்றும் வேளாண்மை துறை உதவி வேளாண் அலுவலர் உள்ளிட்ட 7 அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எச்சரிக்கையை மீறி செயல்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

விருதுநகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரமகாலிங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ” விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வேளாண்மை அடுக்ககம் திட்டத்தில் பதிவு செய்து, அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி,பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகள் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் 01.01.2024 முதல் 31.01.2025 வரை 430 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டும், ரூ.1,13,91,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.