India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், சேவைகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்து தீர்வு காணும் வகையில் “வணக்கம் விருதுநகர்” என்ற 24 மணி நேரமும் செயல்படும் குறைதீர்க்கும் சேவை எண் 97913-22979 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுப்பதற்காக சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படும் என ஆட்சியர் தகவல்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று (அக்.14) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கைத்தறி மற்றும் துணிநூல் துறையிலிருந்து பிரிக்கப்பட்டு 21.10.2021 அன்று புதிதாக தொடங்கப்பட்ட துணிநூல் துறைக்கு பொது நிர்வாகத்தில் விரிவான அனுபவம் மற்றும் துணிநூல் துறையின் வளர்ச்சிக்கு வலுவான அர்ப்பணிப்பைக் கொண்ட புதிய துணிநூல் இயக்குநராக லலிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (அக்.14) ராஜபாளையம் ஏகேடிஆர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கக்கூடிய 35 பள்ளி மாணவர்களுடனான காபி வித் கலெக்டர் என்ற 108வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (அக்.14) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; இளம் சாதனையாளர்களுக்காக பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (http://schlarship.gov.in) வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தகவல் தெரிவித்துள்ளார்.
ராஜபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 27. இவரது சகோதரர் அருண்குமார், 31 உள்ளிட்ட 5 பேர் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து காரில் நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜபாளையம் திரும்பினர்.வெங்கட்ரமணன் காரை ஓட்டினார். புதுப்பட்டி விலக்கு சடையால் ஆற்று பாலம் அருகே நாய் குறுக்கே வந்ததால், காரை திருப்பியதில் மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விருதுநகர், சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை சுற்றுவட்டாரங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. வருகின்ற தீபாவளி கொண்டாட்டத்துக்காக சிவகாசியில் சுமார் 1,000 பட்டாசு ஆலைகள் பட்டாசு உற்பத்தி செய்து வந்த நிலையில், தற்போது பெய்யும் மழையினால் உற்பத்தி வெகுவாக குறைந்ததாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவகாசி காமராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரி (45). கணவரைப் பிரிந்து தனது மகளுடன் வசித்து வந்த இவர் கடன் தொல்லையால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (அக்.12) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிவகாசி விளாம்பட்டி சாலையில் ஒத்த புலி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு குடோனில் இன்று(அக்.12) பயங்கர வடிவத்தை ஏற்பட்டது. இடியுடன் கூடிய கனமழை பெய்த போது குடோனில் இடி மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட வெடி விபத்தால் சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு தீப்பிலம்பு தென்பட்டது. சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
விருதுநகர், சாத்தூர் அருகே சுமார் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் டெக்ஸ்டைல் ஜவுளி பூங்கா அமைய உள்ளது. டெக்ஸ்டைல் பூங்கா முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரும்போது ரூ.2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் விருதுநகரில் வேலை தேடிவரும் படித்த பட்டதாரி இளைஞர்கள் & பெண்களுக்கு அதிக அளவில் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று (அக்.12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மழையால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.