India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சி பட்டாசு ஆலையில் தற்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சாத்தூர், வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய வாகனங்கள் விரைந்துள்ளனர். இதில் 3 அறைகள் தரைமட்டமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
.
ராஜபாளையம் திருவள்ளுவர் மண்டபத்தில் இன்று உலகத் தமிழ் கழகம், பாவேந்தர் பாரதிதாசன் பேரவை, ஒளவை தமிழ் மன்றம், அக்கினிச் சிறகுகள் ஆகிய அமைப்புகள் சார்பில் தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் உலகத் தலைவர் நிலவழகன் தலைமையில் சக்தி மகேஸ்வரி பொன்ராசு, தமிழ்வாணன், தமிழாசிரியர் மாடசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் செங்கல் தொழிற்சாலைகள் இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் இயக்க வேண்டும். இதனைத் தவறும் பட்சத்தில் தொழிற்சாலைகள் மீது குற்றவியல் நடவடிக்கை உட்பட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர்ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இந்த ஆண்டு டிசம்பர் 18 முதல் 27 வரை ஆட்சி மொழி சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளது. எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழ் அறிஞர்கள், அரசு அலுவலர்கள் தமிழ் மொழியின் மாண்புகள் குறித்து விளக்கக் கூட்டம் நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த ராமானுஜர் புத்தக வெளியீட்டு விழாவில் ஜீயர் கலந்து கொண்ட நிலையில் உண்மைக்கு புறம்பாக வேண்டுமென்றே மடத்தின் புகழுக்கும்,சடகோப ராமானுஜ ஜீயரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளது. இது பக்தர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக ரங்கராஜன் நரசிம்மன், யூடியூப்பர் பெலிக்ஸ் ஜெரால்டு,களஞ்சியம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மடம் சார்பில் புகார் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 2024 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் டிச.27 அன்று காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
மனிதக் கழிவுகளை , மனிதர்களே அகற்றும் நடைமுறை தங்கள் மாவட்டங்களில் நடைமுறையில் இல்லை என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பிரமான பத்திரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சகாய பிலோமின் ராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியா கிளட் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
நேற்று ஆரம்பித்த கட்சி கூட தங்களுக்கு ஒரு பெரிய சக்தி இருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தவெகவை மறைமுகமாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார். சிவகாசியில் நடைபெற்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான டிஜிட்டல் பிரச்சார பயிற்சி வகுப்பை துவக்கி வைத்த அவர், கடந்த 4 ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி சாதனை படைத்து வருவதாக தெரிவித்தார்.
எலி பேஸ்ட் என்ற மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த அங்கீகாரம் பெறாத பூச்சிக்கொல்லி மருந்துகள் தற்கொலைக்காக பொது மக்களிடையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக இந்த வகை மருந்துகள் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு நிரந்தரமாக தடை விதித்துள்ளது. எனவே தடை செய்யப்பட்ட எலி மருந்துகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் வரும் 21 ஆம் தேதி அன்று பிற்பகல் 2 மணி அளவில் திருக்குறள் வினாடி வினா முதல் நிலைப் போட்டியானது விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே ஆர்வம் உடைய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.