Virudunagar

News November 14, 2024

அகழாய்வில் சுடுமண்ணால் ஆன விளையாட்டு பொருள்!

image

வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 14 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள் கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் விரலால் சுண்டி விளையாடப்படும் சுடுமண்ணால் ஆன விளையாட்டு பொருள், சங்கு வளையல்கள், ஆணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News November 13, 2024

மகளிர் உரிமைத் தொகை அமைச்சர் விளக்கம்

image

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதே இலக்கு. ரேசன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் தொகை வழங்கப்படும் என தகவல் வெளியான நிலையில் முதலமைச்சரின் ஆலோசனையை பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News November 13, 2024

சிவகாசியில் 400 கோடியில் ரிங் ரோடு

image

சிவகாசி நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சிவகாசியிலிருந்து விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நகருக்குள் வராமல் ரிங் ரோடு வழியாக செல்லும் வகையில் ரூ.400 கோடியில் ரிங் ரோடு அமைக்க மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக திட்டமிடப்பட்டன. இப்பணிகளுக்கான டெண்டர் விரைவில் விடப்பட்டு பணி துவங்கும் என நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.

News November 13, 2024

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நல வாரியத்திற்கு 2024ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய நலநிதியை 2025 ஜனவரி 31க்குள் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், தொழிலாளர்களின் குழந்தைகள் பட்டம் மேற்படிப்பு வரை பயில கல்வி உதவித் தொகையாக ரூ.1000 முதல் 12000 வரை வழங்கப்படுகிறது. இதனை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

சுற்றுலா தலமாக மாறுகிறதா இருக்கன்குடி.?

image

அர்ச்சனா நதி வைப்பாறு நதிகளுக்கு நடுவில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தமிழக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இப்பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இரு நதிகளையும் இணைத்து கட்டப்பட்டுள்ள அணையில், வண்ணவிளக்கு, செயற்கை நீர் ஊற்றுடன் பூங்கா, படகு விடுவதன் மூலம் சிறந்த சுற்றுலா தலமாக மாற வாய்ப்புள்ளது.

News November 13, 2024

சிவகாசியில் அமையவுள்ள மாநாட்டு அரங்க மாதிரி வெளியீடு

image

தொழில் நகரமான சிவகாசியில் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாநகராட்சியில் அரசு சார்பாக ரூ.15 கோடி மதிப்பீட்டில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தது மாநகராட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 13,000 சதுர அடி அளவில் கட்டுவதற்காக இந்த மாநாட்டு அரங்கத்தின் மாதிரி புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

News November 12, 2024

விருதுநகர் மாவட்டத்தில் புதிய முயற்சி

image

விருதுநகர் மாவட்டத்தில் சிறுநீரக கோளாறால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உவர் தன்மை கொண்ட நிலத்தடி நீர் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. நிலத்தடி நீரின் தன்மையை மாற்ற மழைநீர் சேகரிப்பு அவசியம் என்ற நிலையில் தற்போது நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் 1087 புதிய குளங்கள் உருவாக்க திட்டமிட்டு 266 புதிய குளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குளங்களை உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

News November 12, 2024

விருதுநகர் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (நவ.12) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22 ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தவறாது கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News November 12, 2024

இளம் படைப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் இன்று (நவ.12) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறவுள்ள கரிசல் இலக்கிய திருவிழாவை முன்னிட்டு சிறந்த இளம் படைப்பாளர் விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விருதுக்கு சிறந்த கதை தொகுப்பு, நாவல் ஆய்வு கட்டுரை போன்ற படைப்புகளை அனுப்பலாம். ஆர்வமுடையோர் நவ.,30ஆம் தேதிக்குள் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

News November 12, 2024

சதுரகிரி கோயிலுக்கு செல்ல நாளை முதல் அனுமதி

image

ஸ்ரீவி.மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படும். இந்நிலையில், ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நாளை(நவ.13) முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!