Virudunagar

News December 26, 2024

ரெங்கராஜன் நரசிம்மன் புழல் சிறையில் கைது

image

ஸ்ரீவி மணவாள மாமுனிகள் மடத்தின் பீடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர் ஜூன் மாதம் சென்னை புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். இதுகுறித்து ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர் சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசி வீடியோ பதிவு வெளியிட்டார். ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், ஸ்ரீவி,ஜீயர் புகாரியில் அவரை இன்று கைது செய்தனர்.

News December 25, 2024

பணி நேரத்தில் போதையில் இருந்த போலீசார் மாற்றம்

image

ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ., யாக பணியாற்றி வரும் மோகன்ராஜ் (53) என்பவர் பணி நேரத்தில் போதையில் இருந்ததாகவும், சக போலீசாருக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது. இது குறித்து டி.எஸ்.பி. ப்ரீத்தி விசாரனை நடத்தி மோகன்ராஜை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார். துறைரீதியிலான விசாரணைக்குப்பின் நடவடிக்கை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

News December 25, 2024

குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் மாவட்டம் தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 27 முதல் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News December 25, 2024

தென்னை மரங்களை வேரோடு சாய்த்த காட்டு யானை

image

ஸ்ரீவி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரமான செண்பகத்தோப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் உலாவி வருகின்றன. அந்த யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலத்திற்குள் புகுந்து தென்னை மற்றும் மா மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தி வருவதால் இரவு நேரங்களில் தோட்டத்திற்கு செல்லும் விவசாயிகள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே வனத்துறையினர் நடவடிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 25, 2024

யூரியா கலந்த அரிசி சாப்பிட்டு 6 ஆடுகள் உயிரிழப்பு 

image

மைலி இலுப்பைகுளம் பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவருக்கு சொந்தமான சுமார் 6 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த நிலையில்  மிதலைக்குளம் கண்மாய் பகுதியில் அரிசியுடன், யூரியா கலந்து விஷம் வைத்ததால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 25, 2024

விருதுநகர்: காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து அறிவியல் கண்காட்சியில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த 50 மாணவர்களுடன் ‘காபி வித் கலெக்டர்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கினார்.

News December 25, 2024

விருதுநகர்: பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் சீண்டல்

image

விருதுநகர் கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்க அரசு பள்ளியை சேர்ந்த 17 & 14 வயது இரு மாணவிகள் தேர்வாகினர். இவர்களை ஆசிரியர் ராஜாமணி(50) காரில் அழைத்து சென்றார். இதில் 17 வயது மாணவியிடம் ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். பின், 14 வயது மாணவி ஆசிரியருடன் ஈரோட்டிற்கு செல்வதை அறிந்த 17 வயது மாணவி தலையாசிரிடம் தகவல் தெரிவித்தார்; விருதுநகர் மகளிர் போலீசார் ஆசிரியரை போக்சோவில் கைது செய்தனர்.

News December 25, 2024

சிவகாசியில் இன்றைய முக்கிய நிகழ்வு

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று(25.12.2024) மாலை 04:30 மணியளவில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய கலையரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்நிகழ்வில் ஆட்சியர் ஜெயசீலன், மேயர் சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

News December 24, 2024

நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த 4 பேர் கைது

image

ஸ்ரீவி ஆட்டுப்பண்ணையை சேர்ந்தவர் சூர்யா.இவரை மம்சாபுரத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியதில் காயமடைந்தார். இதனையடுத்து ஸ்ரீவி., அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மம்சாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரிக்க சென்றபோது,அங்கு 4 நாட்டு வெடிகுண்டுகள் கிடந்துள்ளன.இது குறித்து வழக்குபதிந்து விசாரித்து வந்த நிலையில் சூர்யா, தவசியம்மாள்,ஜெயக்குமார், முனியசாமி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

News December 23, 2024

திருக்குறள் தொடர்பான புகைப்பட கண்காட்சி துவக்கம்

image

விருதுநகரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் இன்று நூலகத்துறை சார்பில் அய்யன் திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் 133 அடி உயர திரு உருவ சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு திருக்குறள் தொடர்பான புகைப்பட கண்காட்சியை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் திறந்து வைத்தார். பின்னர் திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

error: Content is protected !!