India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கால் இழப்புகளை தடுக்க ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டத்தில் 9 அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் 58 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதா மணி இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மனித வள மேம்பாட்டு நிறுவனம், விஷன் ஸ்பிரிங் இணைந்து நாளை (நவ.20) இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. பட்டாசு தொழிலாளர்கள் வசிக்கும் 30 இடங்களில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் தமாகா சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. பை பாஸ் சாலையில் நடந்த முகாமிற்கு, விருதுநகர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவருமான ராஜபாண்டியன் தலைமை தாங்கி, உறுப்பினர் சேர்க்கை பணியை துவக்கி வைத்து, உறுப்பினர் படிவத்தை வழங்கினார். சட்டசபை தொகுதிக்கு 2000 உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பு பகுதி சேர்ந்த வெங்கடேஸ்வரி. இவரது மூத்த மகன் அஜய்ராம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், தனது தாய் வெங்கடேஸ்வரியிடம் தமிழ் கையேடு வாங்கி தர வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் வாங்கி தராமல் தையல் வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் இருந்த மாணவன் அஜய்ராம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் புகையிலை தடுப்பு சம்பந்தமாக எஸ்.ஐ. ஜோதி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பேருந்து நிறுத்தம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த முனீஸ்வரன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 16 பவுச்சிகளை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், மார்க்கநாதபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த இளையராஜா மகன் பாண்டித்துரை(12). இவர் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகளில் மீதமிருந்தவற்றை கடந்த நவ.9-ஆம் தேதி மாலை வீட்டுக்கு பின்புறம் வெடித்த போது, பலத்த காயமடைந்தார். இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் நேற்று(நவ.17) உயிரிழந்தார். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து பெரியாறு அணை 38 அடியும், கோவிலாறு அணை 30 அடியும் தண்ணீர் உள்ளதால், வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள விவசாய பாசனத்திற்காக இன்று இரு அணைகளிலும் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இன்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தண்ணீரை திறந்து வைக்க உள்ளார்.
சிவகாசி மாநகராட்சி பகுதியில் பொது சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டு அவற்றை அழகுபடுத்தும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே பொது சுவர்களில் உரிய அனுமதியின்றி விளம்பரம் செய்தாலோ, சுவரொட்டி ஒட்டினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை தரமணி தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று ஆய்வு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் ஜவுளி தொழிலின் சந்தை மதிப்பு 176 பில்லியன் டாலராக உள்ளது. இது 2030 இல் 350 பில்லியன் டாலராக உயரும். ஜவுளித்துறை உற்பத்தியை அதிகரிக்க விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 278 வாக்குச்சாவடி மையங்களில் இன்று இரண்டாவது நாளாக வாக்காளர் பட்டியலில் திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம், உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே வாக்குச்சாவடிகளில் திமுக மாநகரச் செயலாளர் உதயசூரியன், நேரில் பார்வையிட்டு வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.