Virudunagar

News March 11, 2026

விருதுநகர்: EX ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை

image

விருதுநகர் அருகே வரலொட்டியைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி(57). இவர் காரியாபட்டி சாலையில் வில்லிபத்திரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி கண்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

News March 10, 2026

விருதுநகர்: கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது – MP

image

தமிழ்நாட்டில் விருதுநகர், மதுரை மாவட்டங்களில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் மக்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மக்கள் முன்பே பார்த்த ஒரு நிலை. இந்த நிலை குறித்து மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். மக்களை மீண்டும் ஒரு தேவையற்ற நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது என விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

விருதுநகர்: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News March 10, 2026

சிவகாசி: பள்ளி அருகே பட்டாசு கடைகள் – அதிர்ச்சி

image

சிவகாசி அருகே மாரனேரியில் தனியார் பள்ளி அருகே சுமார் 200 மீட்டர் தூரத்தில் 10-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு அருகே பட்டாசு கடைகளுக்கு விதியை மீறி உரிமம் வழங்கப்பட்டதா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதுடன் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 10, 2026

BREAKING விருதுநகரில் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்

image

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தினசரி 700 வணிக சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் நிலையில் 2 நாட்களாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே வணிக சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகிறது.

News March 10, 2026

விருதுநகர்: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

image

விருதுநகர் மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.

News March 10, 2026

விருதுநகர்: பீரோவை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை

image

அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (37). இவர் சில மாதங்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். திரும்பி வந்து பார்க்கையில் இவரது வீட்டில் இருந்த 40 பவுன் நகையை மர்ம நபர்கள் பீரோவை உடைத்து திருடியது தெரியவந்தது. இது குறித்த புகாரில் மதுரையை சேர்ந்த சகாயலூர்துராசு (28), ஜராவதநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கர் (28) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நகைகளை மீட்டனர்.

News March 10, 2026

விருதுநகர்: மயானத்தில் பேரதிர்ச்சி சம்பவம்

image

விருதுநகரை சேர்ந்த தெய்வேந்திரன்(58), கரூரை சேர்ந்த ஆனந்தராஜ்(66) ஆகியோர் மதுரை G.H-ல் உயிரிழந்தனர். இவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்கள் முகத்தை கூட பார்க்காமல் உடலை வாங்கி சென்றுள்ளனர். விருதுநகர் மயானத்தில் முகத்தை பார்த்தபோது தான் உடல் மாறியது தெரியவந்தது. பின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேற்று அதிகாலை உடல்கள் மீண்டும் சரியான உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

News March 10, 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் தின விழா

image

ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில்  தலைவர்  இராமானுஜம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர்  மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  வனிதா  மகளிர்க்கான  விழிப்புணர்வு  சிறப்புரையாற்றினார். பின்னர் மகளிர்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News March 10, 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் தின விழா

image

ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில்  தலைவர்  இராமானுஜம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர்  மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  வனிதா  மகளிர்க்கான  விழிப்புணர்வு  சிறப்புரையாற்றினார். பின்னர் மகளிர்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

error: Content is protected !!