Virudunagar

News January 30, 2025

திருக்குறள் மாணவர் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு

image

விருதுநகரில் 1000 மாணவர்கள், 200 ஆசிரியர்கள் பங்கேற்கும் திருக்குறள் மாணவர் மாநாடு ஜன.31, பிப்.1 அன்று மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், கவிஞர் ஜெயந்தா, பிக்பாஸ் சீசன் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்ற உள்ளனர். இதில் பள்ளி, கல்லூரி மாணர்கள், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News January 30, 2025

விற்காமல் தேங்கி கிடக்கும் பொங்கல் கரும்பு

image

சிவகாசியில் தைப்பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பொங்கல் கரும்பு விற்பனை நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் கரும்புகள் முழுமையாக விற்று தீர்ந்தாலும் ஒரு சில இடங்களில் கரும்புகள் விற்காமல் தேங்கியது. விற்காத கரும்புகளை வாகனங்களில் ஏற்றிச் சென்றால் நஷ்டம் ஏற்படும் என்பதால், வியாபாரிகள் அப்படியே விட்டு சென்றனர். இதனால் கரும்பு கட்டுகள் அனைத்தும் காய்ந்து வீணாகியுள்ளது.

News January 30, 2025

சிவகாசியில் பட்டாசு உற்பத்தி நிறுத்தம்

image

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பட்டாசு தயாரிக்க குளிர்ச்சியான சூழல் உகந்ததாக இருக்காது என்பதால் இன்று பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

News January 30, 2025

கல்லூரி மாணவனுக்கு ஐகோர்ட் நூதன தண்டனை

image

கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த வழக்கில் கைதான விருதுநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவனுக்கு 3 வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிவகாசியில் உள்ள அறிவுசார் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கிய மதுரை ஐகோர்ட். மாணவனின் தந்தை தாக்கல் செய்த மனு மீது நூதன முறையில் தண்டனை.

News January 30, 2025

விருதுநகர் மாவட்டம் புத்தகத்தை வெளியிட்ட அமைச்சர்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(ஜன.29) விருதுநகர் மாவட்டம் ஒரு கண்ணோட்டம் ஒரு வரலாற்று பயணம் 1800-1950 புத்தகத்தினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் முன்னிலையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News January 29, 2025

முத்திரைத் தீர்வையை செலுத்தி ஆவணத்தை விடுவிக்கலாம்

image

விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் இந்திய முத்திரைச் சட்டம் 1899, வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள இனங்களை, சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் தங்கள் ஆவணத்திற்குண்டான குறைவு முத்திரை தீர்வையை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் செலுத்தி ஆவணத்தை விடுவித்து கொள்ளலாம். மார்ச் 31 வரை வருவாய் மாவட்டம்தோறும் சிறப்பு முனைப்பு இயக்கம் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 29, 2025

விருதுநகரில் ரூ.3.00 லட்சம் மானியம் அறிவிப்பு

image

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகம் துவங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்களுக்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும். அதன்படி விருதுநகரில் மருந்தகம் அமைக்க ஆர்வமுள்ளவர்கள் <>(இங்கே Click செய்து)<<>> ஜன.31 க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.*நண்பர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்

News January 29, 2025

விருதுநகரில் மாணவர்களுக்குத் தமிழில் பேச்சுப்போட்டிகள்

image

தமிழ்மொழிக்கான பங்களிப்பை நினைவுகூரும் வகையில் பிப்.13 அன்று விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இலக்கியக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பார்த்தசாரதி, இராஜநாராயணன், கு.அழகிரிசாமி ஆகிய இலக்கிய ஆளுமைகள் குறித்து பிப்.6 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல்பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 வழங்கப்பட உள்ளது.

News January 29, 2025

சிவகாசி மாநகராட்சியில் 49% வரி வசூல்

image

சிவகாசி மாநகராட்சியில் சொத்து வரி, வணிகவரி, தொழில் வரி, குப்பை, குடிநீர் வரி என ஆண்டுக்கு 36 கோடி வசூலாகிறது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டிற்கான வரி வசூல் இதுவரை 17 கோடி 91 லட்சம் ரூபாய் வரை அதாவது 49% வசூலாகி உள்ளதாகவும் மீதமுள்ள 51% வரியை வசூலிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் காலதாமதமின்றி வரி செலுத்த அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News January 29, 2025

பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர்கள் மீது வழக்கு

image

வெம்பக்கோட்டை அருகே மடத்துப்பட்டியில் ஆர்.எஸ்.ஆர் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று இரவு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு அறை தரைமட்டமானது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வெம்பக்கோட்டை போலீசார் ஆலையின் உரிமையாளர்களான சண்முகையா (60), அவரது மகன் ஜெய்சங்கர் (40) ஆகிய இருவர் மீது அஜாக்கரதையாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!