India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனி கணேஷ் குமார்.இவர் திருத்தங்கல் போக்குவரத்து பிரிவில் போலீசாக பணிபுரிகிறார். இவரது மனைவி முனீஸ்பாண்டியிடம் ரமேஷ்குமார் என்பவர் எனக்கு அரசியல்வாதிகளை தெரியும் என்று சொல்லி அரசு வேலை வாஙகி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்துள்ளார்.அவரை கைது செய்த போலீசார் அவருக்கு உடந்தையாக இருந்த திவ்யாலட்சுமியை தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் இன்று (டிச.28) திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியினை ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அலைபேசிகள் மூலம் போட்டோ எடுப்பது மட்டுமில்லாமல் வீடியோ கால் மூலம் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் உறவினர்களுக்கும் பேசுகின்றனர். சமீபத்தில் இசைமைப்பாளர் இளையராஜா அர்த்த மண்டபத்திற்குள் நுழைந்ததாக வீடியோ வெளியானதையடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் போட்டோ வீடியோ எடுப்பதற்கு கோயில் நிர்வாகம் தடை. *ஷேர் செய்யவும்*
ஸ்ரீவி.மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படும். இந்நிலையில், மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு டிச.28 முதல் டிச.31 ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சிவகாசி மாநகராட்சி மற்றும் அன்பால் இணைவோம் அறக்கட்டளை இணைந்து பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் சிவகாசி அரசு மருத்துவமனையில் குழந்தைத் தொட்டில் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிவகாசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அய்யனார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஜானகி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் முனியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவி.மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படும். இந்நிலையில், மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு டிச.28 முதல் டிச.31 ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
லயன்ஸ் கிளப் ஆஃப் விருதுநகர் பெருமையுடன் வழங்கும் மாபெரும் கோலம் போட்டி. மாவட்ட ஆட்சியர் வருகை தினத்தை முன்னிட்டு பெண்களின் தனிச்சிறப்புமிக்க இந்த கோலம் போட்டி நடைபெற உள்ளது. டிச.31 செவ்வாய்க்கிழமை நேரம் மாலை 3 மணி இடம் சரஸ்வதி அம்மாள் லயன்ஸ் கிளப் ஸ்கூல் அருப்புக்கோட்டை சாலை விருதுநகர் அனுமதி இலவசம். கோலத்திலும் தேவையான பொருட்கள் போட்டியாளர்களை கொண்டு வரவேண்டும். *ஷேர்*
ராஜபாளையம் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,ஆக மோகன்ராஜ்(53) பணிபுரிந்தார். டிச.23 இரவு பணியில் இருந்த பெண் போலீசிடம் மது போதையில் தவறாக நடக்க முயன்றார்; உடனே பெண் போலீஸ் இதுகுறித்து தனது அலைபேசியில் வீடியோ எடுத்து எஸ்.பி., கண்ணனுக்கு அனுப்பி வைத்தார். மருத்துவ சோதனை செய்ததில் மோகன்ராஜ் மது போதையில் இருந்தது தெரிந்ததையடுத்து உடனடியாக மோகன்ராஜ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
சிவகாசியில் வரும் 28 & 29 ஆகிய நாட்களில் “சுவையுடன் சிவகாசி” என்ற தலைப்பில் இசையுடன் கூடிய உணவு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் சைனீஸ், அரேபியன், மெக்சிகன், இந்திய பாரம்பரிய உணவு என உலகத்தில் உள்ள அனைத்து உணவுகளையும் சுவைக்க 60 ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் பிரபல சூப்பர் சிங்கர்ஸ் பாடகர்கள், யூடியூப்பர் கோபி & சுதாகர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி, வான வேடிக்கை, மேஜிக் ஷோ நடைபெற உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் நற்பெயர்க்கும், தமிழக முதல்வர் குடும்பத்திற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு வீடியோ பதிவு வெளியிட்ட யூடூபர் வெளியிட்டாளர் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன், திருவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் நிர்வாகி சக்திவேல் ராஜன் தந்துள்ள புகாரின் பேரில் சிவகாசி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்: 2 காவல்துறையினரால் ஆஜர்.
Sorry, no posts matched your criteria.