India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2025 ஆம் ஆண்டில் திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது திருநங்கையர் தினமான ஏப்.15 அன்று தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பிப்.10 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வச்சக்காரபட்டி அருகே பாலாஜி என்பவருக்கு சொந்தமான சாய்நாத் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தநிலையில் அவர்களது உடல்கள் உறவினர்களிடன் ஒப்படைக்கப்பட்டது. வெடி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு பட்டாசு ஆலை சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம், ஈமச்சடங்கிற்காக தலா ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்பட்டது.
விருதுநகர் அருகே பொம்மையாபுரம் பகுதியில் இன்று காலை நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த வேல்முருகன், நாகராஜ், கண்ணன், காமராஜ், சிவக்குமார், மீனாட்சி சுந்தரம் ஆகிய 6 நபர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அப்பைய நாயக்கன்பட்டியிலுள்ள சாய்ராம் பட்டாசு
ஆலையில் எற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 அறைகள் சேதமடைந்தன. இந்த
பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில், சேதமடைந்த கட்டட இடிபாடுகளில் சிக்கிய
தொழிலாளர்களின் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு என தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணி தீவிரம்.
போலியான ஏஜென்சி, முகவர்கள் மூலமாக வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் பல இளைஞர்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. வேலைவாய்ப்பிற்காக செல்லும் இளைஞர்கள், தமிழக அரசின் (www.omcmanpower.tn.gov.in) அல்லது இந்திய அரசின் https://emigrate.gov.in இணையதளத்தில் பதிவு செய்து செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்க விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஜன.02 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-22501006 என்ற எண்ணில் அழைக்கலாம்.
ஸ்ரீவி.ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத நீராட்ட விழாவில் பகல் பத்து உற்சவம் டிச.31 தொடங்கியது. 4ஆம் நாளான இன்று ஆண்டாள் ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் வடபத்ரசாயி சந்நிதி முன் உள்ள கோபால விலாசம் என்னும் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார்ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் மற்றும் பெரியாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் 2024ல் மக்களிடம் அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதன் பின் விஏஓ, பிடிஓ, ஊராட்சி தலைவர் என மொத்தம் 12 பேர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டது. மேலும் 4 சொத்து குவிப்பு வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விருதுநகரில் சுமார் 599011 அரசி அட்டை தாரர்களுக்கு இன்று முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் உள்ள விலங்கியல் துறை சார்பில் பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நாச்சியார்பட்டி கிராம விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு முறைகள், மண்புழு உரம் தயாரித்தல் குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மண்புழு உரம் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.