India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகாசியில் சமீப காலமாக பட்டாசு ஆலைகளில் வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது அதிகரித்து வருகிறது. அவர்கள் கூலி அதிகம் கேட்காத காரணத்தால் இவ்வாறு செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மொழி பற்றிய தெளிவு இல்லாத தொழிலாளர்களை அபாயம் நிறைந்த ரசாயன கலவை பணிகளில் ஈடுபடுத்தினால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் வெளி மாநிலத்தவர்களை ரசாயன கலவை பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது.

வெம்பக்கோட்டை தெற்கு தெருவில் பாண்டியன் (30) என்பவருக்கு சொந்தமான தகரசெட்டில் பட்டாசு தயாரித்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 10 கிலோ சோல்சா வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல் கோதை நாச்சியார்புரம் காலனி தெருவில் ஆவுடையசங்கையா(47) பட்டாசு தயாரித்து கொண்டிருந்த போது அவரிடமிருந்து 5 பெட்டிகளில் சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சத்துணவுடன் முட்டை சாப்பிடுகின்றனர். சத்துணவில் வழங்கப்படும் முட்டைகள் குறைந்தபட்சம் 45கி இருக்க வேண்டும். ஆனால் சில முட்டைகள் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அளவு குறைவாக இருந்தால் அந்தந்த ஒன்றிய பிடிஓ.,க்களிடம் புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. விருதுநகர் மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய <

அருப்புக்கோட்டை வடுகர் கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வடுகர் கோட்டை முத்துமாரியம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதனையடுத்து காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பிக்குடி ஊராட்சி கோபாலகிருஷ்ணபுரம் பள்ளி வளாகத்தில் ஆகஸ்ட்-15ஐ குடியரசு தினம் எனக் குறிப்பிட்டு கிராம சபைக் கூட்டத்திற்கான துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்ட நிகழ்வு பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி: எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம்(21), கடந்த 3 நாட்களுக்கு முன் மாயமானார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் அவரை தேடி வந்த நிலையில் எம்.புதுப்பட்டி காட்டுப்பகுதியில் தர்மலிங்கம் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசார் உடலை மீட்டு கொலை செய்தவர்களை தேடி வருகின்றனர்.

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நாளை (ஆக.14) அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இதில் 8-ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே <

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA, FL11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை சுதந்திர தினமான ஆக.15 தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியாரால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் கடைகள், மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA, FL11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை சுதந்திர தினமான ஆக.15 தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவரால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் கடைகள், மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.