India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீவி முதலியார்பட்டித் தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 100 ஆண்டுகளாக சிவராத்திரி அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று இரவு இந்த பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் என்ற 91 வயது மூதாட்டி 52 வது ஆண்டுகளாக கொதிக்கும் நெய்யில் அப்பத்தை கையால் எடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவார்.
சிவகாசி காய்கறி சந்தை அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் முத்துமாரியம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அந்த வகையில் 8ம் நாளான இன்று ஆனந்த கோலத்தில் படகு சவாரியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதைத் தொடர்ந்து அம்மனை மனம் உருக வழிபட்டனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்பு ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும். அதில் விருதுநகர் மாவட்டத்தில் மார்ச்.8,9 அன்று ராஜபாளையம் ஆறாவது மைல் நீர்த்தேக்கம், ஸ்ரீவி ஆத்திக்குளம், பெரியகுளம், செங்குளம் உள்ளிட்ட 23 ஈர நிலங்களில் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் பறவை ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள் அருகில் உள்ள வனத்துறையினரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT
மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது குல தெய்வ வழிபாடு நடத்துவது வழக்கம். குல தெய்வ வழிபாட்டிற்கு சென்று வருவதற்காக சிவகாசியில் நாளை முதல் 3 நாட்களுக்கு பட்டாசு மற்றும் அச்சக தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. குல தெய்வ வழிபாட்டிற்காக குடும்பத்துடன் சென்று வர ஏதுவாக தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நடப்பாண்டுக்கான முதல் கோடை மழை பிப்.28 அன்று தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிப்.28 முதல் மார்ச்.2 வரை 3 நாட்களுக்கு நெல்லை, விருதுநகர், குமரி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, தேனி, சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் முன்னோடியாக விருதுநகர் மாவட்டம் திகழ்வதாக கூறி மாவட்டத்திற்கு ரூ.3 கோடி பரிசுத்தொகையை நிதி ஆயோக் அறிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் சுகாதாரம் தொடங்கி, ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வது என பொது சுகாதாரத்தில் மக்களின் கூட்டு முயற்சியுடன் திறம்பட செயல்பட்டதாக நிதி ஆயோக் தனது X தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது. உங்களது வாழ்த்துகளை கமெண்டில் தெரிவிக்கலாம்.
அருப்புக்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் பணியாற்றிய அமர்நாத் என்பவர் கணிணி தொழில்நுட்பத்தை முறைகேடாக பயன்படுத்தி அஞ்சலக பணம் ரூ.5 கோடியை அவரது தனிநபர் வங்கி சேமிப்பு கணக்கிற்கு வரவு வைத்து முறைகேடு செய்ததாக 18.5.2024 அன்று வழங்கு பதியப்பட்டது. இதில் 9 மாதமாக தலைமறைவாக இருந்த இவரை நேற்று பந்தல்குடி தனியார் விடுதியில் பதுங்கி இருந்த போது தனிப்படை போலீசார் கைது செய்து ரூ.4,58,90,068 மீட்டுள்ளனர்.
சிவகாசியில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் சித்திரை பொருட்காட்சி துவங்க உள்ளது. ஜேசீஸ் தன்னார்வ அமைப்பு சார்பாக நடைபெறும் இந்த பிரமாண்ட பொருட்காட்சியில் ஸ்டால்கள் அமைக்க விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். விருதுநகரில் மட்டும் 46 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <
சாத்துார் வருவாய் ஆய்வாளரின்(ஆர்.ஐ.,) வீட்டில் ஆக.29ல் ரூ.1 லட்சம், 2.1 பவுன் தங்க நகைகள் திருடு போனது. இது குறித்து விசாரித்த போது வீட்டில் வேலை பார்த்த காயத்ரி(35), திருடியதை ஒப்புக்கொண்டார். அதில் ரூ.35 ஆயிரத்தை திருப்பி கொடுத்து மீதமுள்ள பணம், நகைகளை பிப்ரவரிக்குள் தருவதாக தெரிவித்தவர் திரும்ப தரவில்லை. இதனால் ஆர்.ஐயின் கணவர் ஊரகப்போலீசில் புகார் அளித்தார். போலீசார் காயத்ரியை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.