Virudunagar

News February 6, 2025

போதை பொருட்கள் தொடர்பாக APP மூலம் புகார் அளிக்கலாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் போதைப்பொருள், புகையிலை பொருட்கள் தொடர்பாக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து தங்களுடையை சுயவிவரங்கள் இன்றி புகார் செய்வதற்கு DRUG FREE TN என்ற அலைபேசி செயலியை(MOBILE APP) பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். SHARE IT

News February 5, 2025

விருதுநகர் அருகே பட்டாசு வெடி விபத்து

image

விருதுநகர் அருகே சின்னவாடி பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி என்ற பட்டாசு ஆலையில் தற்போது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.பட்டாசு ஆலையின் உள்ளே தொழிலாளர்கள் சிக்கி இருப்பாதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

News February 5, 2025

பெண் தொழில்முனைவோர் கலந்து கொள்ள அழைப்பு

image

பெண்களிடையே தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடுஅரசால் TN-RISE மகளிர் புத்தொழில் கவுன்சில் நிறுவப்பட்டது. தொழில்முனைவோர் நிறுவனங்களுக்கு அடிப்படை மற்றும் மேம்பட்ட இணக்க சேவைகளை வழங்குவதற்காக மதுரையில் வேளாண் உணவு வர்த்தகமையத்தில் பிப்.7 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை Compliance Mela-வினை நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9994142115, 9514737043 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News February 5, 2025

செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் கைது

image

சாத்தூர், முள்ளிசெவலில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளி நிருபம் மாராக் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் வேலைக்கு சென்ற போது இவரது செல்போனை அடையாளம் தெரியாத 4 பேர் பறித்துச் சென்றதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்.பி அறிவுறுத்தலின் படி தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த சின்னசாமி(19), மனோ(19) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News February 5, 2025

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு

image

வெளிநாடுகளுக்கு வேலை, கல்வி நிமித்தமாக செல்லும் இளைஞர்கள் ஒன்றிய அரசின் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா, பணி ஒப்பந்த விவரங்களை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். வேலைக்கு செல்வோர் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் பட்டியலை www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் வேலையின் உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

News February 5, 2025

விருதுநகர் திரையரங்கில் வெளியாகும் விடாமுயற்சி

image

நடிகர் அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான `விடாமுயற்சி` நாளை(பிப்.6) வெளியாக உள்ளது. இதற்கு ரசிகர் மிகவும் ஆர்வத்துடன் உள்ள நிலையில் படத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர். அதில் விருதுநகர் ராஜலட்சுமி, ராஜபாளையம் ரேடியன்ஸ், மீனாட்சி, சிவகாசி கனேஷ், ஸ்ரீபழனி ஆண்டவர், ஸ்ரீவி ரேவதி, தெய்வம், அருப்புக்கோட்டை KLASMAX , குயின்ஸ் ரத்தினவேல், தமிழ்மணி உள்ளிட்ட திரையரங்கில் வெளியாகிறது.

News February 5, 2025

ராஜபாளையம் தம்பதி கொலையில் குண்டாஸ்

image

ராஜபாளையத்தில் 16.7.22 அன்று வீட்டில் தனியாக இருந்த ராஜகோபால்(75), அவரது மனைவி குருபாக்கியம் ஆகியோர் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான முத்துக்குமாரை போலீசார் குண்டர் சட்டத்தில் நேற்று(பிப்.4) கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

News February 5, 2025

அலுவலர்களை மிரட்டினால் குண்டாஸ் – ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல், இதர கனிமங்களை வெட்டி எடுப்பது, அதை எடுத்துச்செல்வது குற்றமாகும். மேலும் கனிமங்களை வெட்டி எடுப்பது, அதை எடுத்துச்செல்வது, அதைத் தடுக்க முற்படும் அரசு அலுவலர்களை அச்சிறுத்துவது போன்ற குற்ற சம்பங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட குற்றவியல் சட்டங்களின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர் என ஆட்சியர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.

News February 5, 2025

முன்னாள் படை வீரர்களுக்கு காக்கும் கரங்கள் திட்டம்

image

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தொழில் தொடங்குவதற்காக மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல இணை இயக்குநர் அலுவகத்தினை தொடர்பு கொள்ளவும்.

News February 4, 2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

மணல் மற்றும் இதர கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் எடுத்துச்செல்வது, அதைத் தடுக்க முற்படும் அரசு அலுவலர்களை அச்சுறுத்துவது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட குற்றவியல் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!