Virudunagar

News March 30, 2026

விருதுநகர்: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572!

image

விருதுநகர் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

News March 30, 2026

சாத்தூர்: கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

image

ஏழாயிரம்பண்ணை அருகே அச்சங்குளத்தில் செல்போன் மாயமான சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த 23-ம் தேதி அதை ஊரைச் சேர்ந்த மதிச்செல்வம் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்தது. இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே குருபாண்டி, மனோஜ்குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த குருபாண்டியின் சகோதரர் ராஜபாண்டி மற்றும் நவீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

News March 30, 2026

சாத்தூர்: கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

image

ஏழாயிரம்பண்ணை அருகே அச்சங்குளத்தில் செல்போன் மாயமான சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த 23-ம் தேதி அதை ஊரைச் சேர்ந்த மதிச்செல்வம் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்தது. இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே குருபாண்டி, மனோஜ்குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த குருபாண்டியின் சகோதரர் ராஜபாண்டி மற்றும் நவீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

News March 30, 2026

சாத்தூர்: கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

image

ஏழாயிரம்பண்ணை அருகே அச்சங்குளத்தில் செல்போன் மாயமான சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த 23-ம் தேதி அதை ஊரைச் சேர்ந்த மதிச்செல்வம் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்தது. இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே குருபாண்டி, மனோஜ்குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த குருபாண்டியின் சகோதரர் ராஜபாண்டி மற்றும் நவீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

News March 30, 2026

சாத்தூர்: கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

image

ஏழாயிரம்பண்ணை அருகே அச்சங்குளத்தில் செல்போன் மாயமான சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த 23-ம் தேதி அதை ஊரைச் சேர்ந்த மதிச்செல்வம் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்தது. இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே குருபாண்டி, மனோஜ்குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த குருபாண்டியின் சகோதரர் ராஜபாண்டி மற்றும் நவீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

News March 29, 2026

சிவகாசி: யார் இந்த தவெக வேட்பாளர் கீர்த்தனா

image

சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கீர்த்தனா விருதுநகரை பூர்வீகமாக கொண்டவர். பிரசாந்த் கிஷோரின் i-pac உள்ளிட்ட முன்னணி அரசியல் ஆலோசனை நிறுவனங்களில் அரசியல் ஆலோசகராக பணியாற்றிய இவர் விருதுநகரில் சுயேட்சையாக போட்டியிடுவதாக கடந்த 3 மாதம் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வந்த நிலையில் திடீரென தவெகவில் இணைந்தவுடன் சிவகாசி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

News March 29, 2026

கவனம் பெறும் ஸ்ரீவில்லிபுத்தூர்; புதிய அறிவிப்பு!

image

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி 70 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் போட்டியிடுவார் என சற்றுமுன் அறிவிப்பு வெளியானது. ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுகவின் கூட்டணி கட்சியான CPI களமிறங்கும் நிலையில், திமுக,அதிமுக, தவெக, நாதக நான்கு முனை போட்டியில் தற்போது புதகவும் இணைந்துள்ளது.

News March 29, 2026

சிவகாசி தொகுதியில் பிரபல நடிகர் போட்டியா?

image

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தை துவங்கியுள்ள சசிகலாவை நடிகர் கார்த்திக் நேரில் சந்தித்து அவரது தலைமையிலான அணிக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நடிகர் கார்த்திக் சிவகாசி தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 29, 2026

BREAKING விருதுநகர்: த.வெ.க.,வேட்பாளர்கள் அறிவிப்பு

image

வரும் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க., 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சற்றுமுன் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதில்,
விருதுநகர் – செல்வம்
திருச்சுழி – சமயன்
அருப்புக்கோட்டை – கார்த்திக்குமார்
சாத்தூர் – அஜித்
சிவகாசி – கீர்த்தனா
ராஜபாளையம் – ஜெகதீஸ்வரி
ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி) – கார்த்திக்

News March 29, 2026

ராஜபாளையத்தில் ஜான் பாண்டியன் மனைவி போட்டி

image

தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா., த.ம.மு.க., இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுகீடு செய்யப்பட்டது. அதில் த.ம.மு.க.,க்கு ராஜபாளையம் பொதுத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இத்தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளராக ஜான் பாண்டியன் மனைவி பிரிசில்லா தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!