India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதலமைச்சர் ஆணையின்படி, விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர் கல்வி வரையிலான அனைத்துக் கல்வி செலவுக்கான உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது பற்றிய தகவல்களுக்கு 9865958876 மற்றும் 9344745064 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். * அனைவருக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*
விருதுநகர் மாவட்டத்தில் சாதாரண கற்கள், மண், கிராவல், கிரானைட் போன்ற சிறுவகை கனிமங்கள் மற்றும் 31 வகையான சிறுகனிமங்களுக்கான குவாரி குத்தகை உரிமம், சுண்ணாம்புக்கல் போன்ற பெரு கனிம குவாரிகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் செங்கல் சூளை பதிவு சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, www.mimas.tn.gov.in இணையதளத்தில் பிப்.24 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.*தேவைபடுவோருக்கு பகிரவும்*
விருதுநகர் மாவட்டத்தில் ஒற்றை பயன்பாட்டு நெகிழிக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகள் பயன்படுத்துவதை ஊக்குவித்து முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் நிறுவனங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம். தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்.விண்ணப்பிக்க <
பல்லாயிரம் ஆண்டு தொன்மையான இலக்கியங்களை தன்னகத்தே கொண்டு, தன்னிலிருந்து பிற மொழிகள் பிறந்தாலும், தனக்கென அமையப்பெற்ற இலக்கணத்தோடு பல கோடி மக்களால் பேசப்படும் ஒரே மொழி நம் தாய்மொழி தமிழ். மண்ணுள் புதைந்து கிடக்கும் நம் தமிழின் சான்றுகள் ஒவ்வொன்றாக கிடைக்கப்பெறும் போதெல்லாம் வரலாறு தன்னை சுய திருத்தம் செய்து கொள்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தனது X தள பதிவில் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் விண்ணப்பிக்க உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் www.virudhunagar.nic.in இணையதளம் மூலம் மார்ச்.7 க்குள் விண்ணப்பிக்கலாம்.
அரியலூர், உடையார்புரம் பகுதியில் வசந்தா என்பவரின் வீட்டில் கடந்த 14 ஆம் தேதி மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற நிலையில் அவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் சிவகங்கையைச் சேர்ந்த சண்முகநாதன்(27), மணிக்காளை(29), விருதுநகரை சேர்ந்த அழகுபாண்டி(24) உள்ளிட்ட 5 பேரை மதுரை அருகே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விருதுநகரில் கடந்த 10.11.2024 அன்று முதல்வர் ஸ்டாலின் பட்டாசு விபத்தில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும் என அறிவித்தார். இதற்கு ரூ.5.00 கோடி நிதி ஒதுக்கிய நிலையில் 10.11.2024 முதல் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 98659-58876, 93447-45064 எண்களின் தொடர்பு கொள்ளலாம்.
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை(பிப்.21) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20 க்கும் மேற்பட்ட தனியார் பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அதற்கான இணையதளத்தில் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கல்வி சான்று, ஆதார் நகலுடன் கலந்து கொள்ளலாம்.
சிவகாசி அருகே போர்டுரெட்டியபட்டி பகுதியில் நேற்று ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் சுரேஷ் என்ற தொழிலாளி உயிரிழந்த நிலையில் பால்பாண்டி என்பவர் காயமடைந்தார். இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.மேலும் காயமடைந்த பால்பாண்டிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் தாசில்தார் உட்பட 5 வருவாய்த்துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து கடந்த 14ஆம் தேதி முதல் வருவாய்த்துறையினர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில் நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்க கூட்டமைப்பு தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.