India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாத்துார் வருவாய் ஆய்வாளரின்(ஆர்.ஐ.,) வீட்டில் ஆக.29ல் ரூ.1 லட்சம், 2.1 பவுன் தங்க நகைகள் திருடு போனது. இது குறித்து விசாரித்த போது வீட்டில் வேலை பார்த்த காயத்ரி(35), திருடியதை ஒப்புக்கொண்டார். அதில் ரூ.35 ஆயிரத்தை திருப்பி கொடுத்து மீதமுள்ள பணம், நகைகளை பிப்ரவரிக்குள் தருவதாக தெரிவித்தவர் திரும்ப தரவில்லை. இதனால் ஆர்.ஐயின் கணவர் ஊரகப்போலீசில் புகார் அளித்தார். போலீசார் காயத்ரியை கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை தெற்கு தெரு முருகன் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருந்தகத்தினை நாளை (பிப்.24) காலை 10 மணி அளவில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து மாலை வேல்ராஜன் அரங்கில் நடைபெற உள்ள சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்க உள்ளார்.
சிவகாசி அருகே திருத்தங்கல்லில் அதிமுக சார்பில், மக்கள் பயன்படுத்தும் கழிப்பறையை வழி மறித்து நீளமான பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிமீறல் சிவகாசிக்கு சில மாதங்களுக்கு முன்பு வந்துள்ள டிஎஸ்பி பாஸ்கரன் வந்த பிறகுதான் நடைமுறைக்கு வந்துள்ளதாக திமுக மாநகராட்சி செயலாளர் உதயசூரியன் தனது முகநூலில் விமர்ச்சித்து பதிவிட்டுள்ளார்.
வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கும் இவரது மகனுக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராமகிருஷ்ணனும் மகன் ஸ்ரீராமும் குடிபோதையில் சண்டை போட்டு வந்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த ராமகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காரியாபட்டி அருகே செவல்பட்டியில் சுப்புராஜ் வீட்டில் பிப்.4 அன்று பீரோவை உடைத்து 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் கணேசன், பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் கண்ணன் குமாரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து கணேசனை போலீசார் கைது செய்து 16 பவுனை மீட்ட நிலையில் கண்ணன் குமாரை தேடி வருகின்றனர்,
சிவகாசி, நதிக்குடியைச் சேர்ந்த ராஜ் என்பவர் 9.4.2016 அன்று பட்டாசு தொழிலாளர்களுக்கு சம்பளம், போனஸ் வழங்க டூவிலரில் ரூ.17.77 லட்சத்தை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது இவரை வழிமறித்த மர்மநபர்கள் ராஜை வெட்டிப் படுகொலை செய்து அவரிடமிருந்த ரூ.17.77 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் நடந்து 9 ஆண்டுகளாகியும் போலீசார் குற்றவாளைகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
கிழடியில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் அவ்வப்போது கிடைக்கப் பெற்று வருகிறது. அந்தவகையில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்கப் பெற்று வருகிறது. அண்மையில், சங்கினால் செய்யப்பட்ட பதக்கம் கண்டெடுக்கப்பட்டது கூடுதல் சிறப்பு.தொடர்ந்து தமிழர்களின் நாகரீகம் கண்டறியும் வெம்பக்கோட்டை ஒரு விசித்திரக்கோட்டை தான்.
அருப்புக்கோட்டை அருகே பரளச்சி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட செங்குளம், கீழ்க்குடி, வடக்கு நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 13ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பள்ளி தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் அனைத்து பள்ளி தேர்வுகளும் முடிவடையும் வரையிலும் பரளச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர மின்தடை இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகரில் கனிமவள கொள்ளையை தடுக்க தவறிய 12 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் கனிமவளக் கொள்ளையை தடுக்க தவறியதாக 7 அதிகாரிகளை ஆட்சியர் சஸ்பெண்ட் செய்தது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கனிமவளம், வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட பல அரசு அலுவலர்களுக்கு இதில் எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற 40 பக்கக்களுக்கு மேற்பட்ட டைரி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
அருப்புக்கோட்டையில் வருவாய்த்துறை அமைச்சரின் இன்றைய (பிப்.22) நிகழ்ச்சிகள்: சூலக்கரை மற்றும் பாளையம்பட்டி விரிவாக்க பகுதியில் புதிய நியாய விலை கடைகளையும், மேலும் பாளையம்பட்டி விரிவாக்க பகுதியில் புதிய சுகாதார வளாகத்தையும், முத்தரையர் நகரில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியையும், ஆத்திபட்டியில் புதிய நியாய விலைக் கடையையும் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திறந்து வைக்க உள்ளார்
Sorry, no posts matched your criteria.