Virudunagar

News September 22, 2025

விருதுநகருக்கு வரும் துணை முதல்வர்

image

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தருகிறார். அதில்,
1. செப்.22 இரவு 7 மணி – ராம்கோ விருந்தினர் மாளிகையில் வரவேற்பு.
2. செப்.23 காலை 10 மணி – ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்.
3. காலை 11 மணி – தொகுதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்.
4.மாலை 5 மணி – கிருஷ்ணன்கோவிலில் ஸ்ரீவி தொகுதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்.

News September 22, 2025

ஸ்ரீவி நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பூர நட்சத்திரத்தன்று தான் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருவது வழக்கம். அதேபோல் நேற்று புரட்டாசி மாத பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு  நந்தவனத்தில் ஆண்டாள் எழுந்தருளினார். இதனையடுத்து சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News September 21, 2025

விருதுநகர்: பட்டாவில் திருத்தமா?

image

விருதுநகர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு மாவட்ட அதிகாரியை 04562 -252723 அணுகலாம். SHARE பண்ணுங்க

News September 21, 2025

விருதுநகர்: கேஸ் சிலிண்டர் புக் செய்வது இனி ரெம்ப ஈஸி

image

விருதுநகர் மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க

News September 21, 2025

விருதுநகர்: 12th தகுதி., 7267 அரசு காலியிடங்கள்! உடனே APPLY

image

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. கடைசி தேதி – செப். 23 ஆகும். மேலும் விவரங்களுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இப்பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க

News September 21, 2025

சிவகாசியில் இரட்டை சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

image

சிவகாசி பகுதியை சேர்ந்தவர் சுமன்பாண்டிதுரை(29). இவர் சிறுநீர் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மதுரை அருகே உறவினர் வீட்டில் தங்கினார். அதே ஊரில் பாட்டியின் பாதுகாப்பில் இருந்து வந்த இரட்டை சிறுமிகளுக்கு சுமன்பாண்டித்துரை பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் சிறுமிகள் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிறுமியின் சகோதரர் சுமன்பாண்டிதுரையை கத்தியால் குத்தியதில் காயமடைந்தார்.

News September 20, 2025

விருதுநகர்: கேஸ் DELIVERY அப்போ இதை பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News September 20, 2025

சிவகாசி: 5 ஆண்டுகளாக வீணாகும் குடிநீர்

image

சிவகாசி பெரியகுளம் கண்மாய் வழியாக விஸ்வநத்தம் செல்லும் குடிநீர் குழாய் உடைந்து 5 ஆண்டுகளாக குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். விஸ்வநத்தம் பெரியகுளம் கண்மாய்களில் கிணற்றிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இதற்காக கண்மாயில் துாண்கள் அமைக்கப்பட்டு இரும்பு குழாய் வைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருவதாக கூறப்படுகிறது. சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News September 20, 2025

விருதுநகர்: 10th தகுதி.. ஏர்போர்ட்டில் வேலை ரெடி! உடனே APPLY

image

விருதுநகர் மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள 1446 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து நாளை (செப். 21)க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு மதுரையில் நடைபெறும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 20, 2025

விருதுநகர்: கிராம வங்கிகளில் 489 காலியிடங்கள்! நாளை கடைசி

image

விருதுநகர் மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 21க்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும். சம்பளம் (Approx) ரூ.48,000 – ரூ.1,00,000 வரை. டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!