India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாநில அரசுகளின் பங்களிப்பை மறைத்து, இந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழ்நாட்டுக்கு நியாயமான நிதியை மறுப்பது அநீதி. கூட்டாட்சிக் கோட்பாட்டை மதித்து, மாநிலங்களுக்கு உரிய நிதியை விடுவித்து, மக்களின் நலனை முன்னிறுத்தி இந்தியாவை உண்மையான வளர்ச்சிப் பாதையில் ஒன்றிய அரசு எடுத்துச் செல்ல வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தனது X தள பதிவில் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <

விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்/தட்டச்சர் பணியிடத்தினை நிரப்புவதற்கு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடம் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்படும் நிலையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் செப்.30 க்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் மழைக்கால மின்விபத்துகளை தடுக்க பாதுகாப்பு அறிவுரை:
1.அறுந்த கம்பிகள், கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்கவும்.
2.இடி, மின்னலின்போது வெட்டவெளி, மரத்தடி, செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
3.சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால் மின்சாதனங்களை தவிர்க்கவும்.
அவசர உதவிக்கு 9445859032, 9445859033, 9445859034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

சிவகாசியில் தீபாவளிக்கான பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனிடையே ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை, விளம்பரத்திற்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்து மீறுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தன. ஆனாலும் இந்த உத்தரவை மீறி ஏராளமான பட்டாசு விற்பனையாளர்கள் ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு வருகை தர இருந்தார். இந்நிலையில் ஒரு சில காரணங்களுக்காக அவரது வருகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில் நாளை காலை விருதுநகர் வரும் துணை முதல்வருக்கு மதுரை – விருதுநகர் நெடுஞ்சாலையில் உள்ள பொதுப்பணித்துறை மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மற்ற நிகழ்ச்சிகளில் மாற்றம் ஏதும் இல்லை.

விருதுநகர் மாவட்டத்தில் 2011 – 2024 வரை 14 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நடந்திருப்பதாக புள்ளிவிவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துகளில் 379 பேர் உயிரிழந்த நிலையில் 320-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதில், 2012-ம் ஆண்டு செப்.5 முதலிபட்டி விபத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் இன்று மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25க்கு மேற்பட்ட கேஷியர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாத 18 – 35 வயதுகுட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் 39. இவர் தற்போது ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருகிறார். இவர் காரில் செப். 19ல் இரவு 11:30 மணிக்கு விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சென்ற போது மோதியதில் ரோட்டை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்தார். பஜார் போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.