Virudunagar

News March 10, 2025

தனியார்துறை வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழக அரசு உருவாக்கிய தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 146 தனியார் துறை நிறுவனங்கள், 19 துறைகளில், 2128 பணிக்காலியிடங்களை உள்ளீடு செய்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 93601-71161 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 10, 2025

விருதுநகர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

தமிழ்நாட்டில்(மார்ச்.11) விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை. நாகை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் முன் எச்சரிக்கையாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. பிறரும் விழிப்புணர்வுடன் செயல்பட ஷேர் செய்யுங்கள்

News March 10, 2025

விருதுநகரில் போக்குவரத்து மாற்றம்

image

நேற்று(மார்ச்.9) முதல் காமராஜர் புது பஸ் ஸ்டாண்டிற்கான வழித்தட மாறுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் பஸ் ஸ்டாப் சர்வீஸ் ரோடு, எம்.ஜி.ஆர் சாலை, ஆத்துப்பாலம், டி.டி.கே ரோடு, கருமாதி மடம், புது பஸ் ஸ்டாண்ட், எம்.ஜி.ஆர் சாலை ஆகிய பகுதிகளில் வரும் பஸ்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நகரில் போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்புள்ளதாக கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். *ஷேர்

News March 9, 2025

சிவகாசியில் பட்டாசு தொழிலாளி வெட்டி கொலை

image

சிவகாசி முருகன் காலனி சாலையில் உள்ள தனியார் பட்டாசு ஆலை அருகில் இன்று சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த கருப்பசாமி (30) என்பவர் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் மனைவியுடன் மாரிமுத்து என்பவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக அவரை சில நாட்களுக்கு முன் கருப்பசாமி கண்டித்த நிலையில் அவர் தலைமையிலான கும்பல் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம்.

News March 9, 2025

விருதுநகரில் வெளுத்து வாங்க போகும் கனமழை

image

தமிழ்நாட்டில் நாளை (மார்ச்.10) முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதில் மார்ச்.11 அன்று விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News March 9, 2025

விருதுநகரில் ரூ.3.75 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

image

திருச்சியை சேர்ந்த கணேசன் என்பவர் விருதுநகர் மாவட்டத்தில் கலால் வரித்துறை உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் மது விற்பனை செய்வதற்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அப்போது சத்திரெட்டியப்பட்டி சோதனை சாவடி அருகே இவரது காரை சோதனையிட்டத்தில் அதில் தனியார் மது விற்பனைக்கூடங்களிலும்,மெத்தனால் ஆய்வகங்களிலும் லஞ்சமாக பெற்ற ரூ.3.75 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News March 9, 2025

விருதுநகரில் மாணவர் தற்கொலை

image

விருதுநகர் மாவட்டம் பாரதி நகரை சேர்ந்தவர் முருகன் மகன் மாரிமுத்து. இவர் விருதுநகர் அடுத்த சூலக்கரையில் ஐடிஐ படித்து வந்தார்.சரியாக படிக்காமல் மது அருந்தி வந்தவரை பெற்றோர் கண்டித்தனர்.இநநிலையில் மாரிமுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 9, 2025

முன்னாள் படை வீரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு, முதல்வரின் காக்கும் கரங்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் படையில் பணிபுரிவோர்களை சார்ந்தோருக்கான குறைதீர் நாள் கூட்டம் மார்ச்.18 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் ஜெயசீலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 8, 2025

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,408 வழக்குகளுக்கு தீர்வு

image

விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை உள்பட 4948 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் சுமார் 2408 வழக்குகளுக்கு ரூ.11,29,65,571 தீர்வு தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 8, 2025

மாணவர்களுக்கான சிறப்பு ஆலோசனை உதவி மையம்

image

விருதுநகர் மாவட்டத்தில் 2024-25 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான சிறப்பு ஆலோசனை உதவி மையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படவுள்ளது. இம்மையம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்த மார்ச்.26 அன்று முதல் செயல்படும். இதில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல், உளவியல் சார்ந்த வழிகாட்டல் ஆகியவை பெற்று பயன் பெறலாம்.

error: Content is protected !!