Virudunagar

News February 28, 2025

நரிக்குடி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து 

image

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் வீரசோழன் – மதுரைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப்பேருந்து இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று மதுரையில் இருந்து வீரசோழன் சென்ற அரசுப்பேருந்து மானாசாலை அருகேயுள்ள சம்பக்குளம் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  சிலர் காயமடைந்தனர்.அவர்கள் சிகிச்சைக்காக நரிக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை

News February 28, 2025

நகை திருடிய முன்னாள் போலீஸ்காரர் கைது

image

காரியாபட்டியில் கடந்த பிப்., 4ல் எலக்ட்ரீசியன் சுப்புராஜ் வீட்டில் கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த 30 பவுன் நகை திருடப்பட்டது. இவ்வழக்கை காரியாபட்டி போலீசார் விசாரித்து வந்தனர்.இச்சம்பவத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கணேசனை 39, சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். தொடர்ந்து அவர் கூட்டாளியான வ.புதுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் கண்ணன் குமாரை நேற்று காரியாபட்டி போலீசார் கைது செய்தனர்.

News February 28, 2025

இந்திய இராணுவக் கல்லூரியில் சேர்க்கை

image

டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026 பருவத்தில் 8-ம் வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு ஜூன்.1 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவத்தை www.rimc.gov.in மூலமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.rimc.gov.in என்ற இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையதள சேவையினை பயன்படுத்தலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News February 27, 2025

சமூகப்பணி உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்க தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 35 – 65 வயதை பூர்த்தி செய்யாதவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் https://virudhunagar.nic.in அல்லது www.dsdcpimms.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

News February 27, 2025

போதைப் பொருட்கள் தொடர்பாக APP மூலம் புகார் அளிக்கலாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் போதைப்பொருள், புகையிலைப் பொருட்கள் தொடர்பாக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து தங்களுடைய சுயவிவரங்கள் இன்றி புகார் செய்வதற்கு DRUG FREE TN என்ற அலைபேசி செயலியை(MOBILE APP) பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம்.

News February 27, 2025

கல்வி உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். *மறக்காம ஷேர் பண்ணுங்க

News February 27, 2025

விருதுநகர் மக்களே..! அடுத்த மூன்று நாட்கள் கவனம்‌.

image

தமிழகத்தில் இன்று(பிப்.27) முதல் வரும் ஞாயிறு வரை தென் தமிழகத்தில் கன முதல் மிக கனமழையும், குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி,தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் மழை தீவிரமடையும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆகவே விருதுநகர் மக்கள் 3 நாட்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 26, 2025

மாவட்டத்தில் 98 மையங்களில் பிளஸ் 2 தேர்வு

image

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு வருகின்ற மார்ச் மூன்றாம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை மாவட்டம் முழுவதும் உள்ள 222 பள்ளிகளைச் சேர்ந்த 22,313 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு 98 தேர்வு மையங்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 137 மாற்றுத்திறனாளிகள் தேர்வுகளை எழுதுகின்றனர். மேலும் பிளஸ் 1 தேர்வில் 22,023 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

News February 26, 2025

விருதுநகரில் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய கல்வி செலவுகளை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.10.11.2024-க்கு முன் நிகழ்ந்த விபத்துகள், 10.11.2024-க்கு பிந்தைய விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குழந்தைகள் 18 வயது நிறைவடையாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9865958876, 93447 45064 தொடர்பு கொள்ளலாம்.

News February 26, 2025

கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் மூதாட்டி

image

ஸ்ரீவி முதலியார்பட்டித் தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 100 ஆண்டுகளாக சிவராத்திரி அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று இரவு இந்த பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் என்ற 91 வயது மூதாட்டி 52 வது ஆண்டுகளாக கொதிக்கும் நெய்யில் அப்பத்தை கையால் எடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவார்.

error: Content is protected !!