India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 98 மையங்களில் பிளஸ் டூ பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வில் 10,363 மாணவர்கள், 11,861 மாணவிகள் என மொத்தம் 22,224 மாணவ மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 10,115 மாணவர்கள், 11,689 மாணவிகள் என மொத்தம் 21,804 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 420 பேர் தேர்வு எழுதவில்லை.
ஸ்ரீவி அருகே உள்ள இடையபொட்டல்பட்டி ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன்(64). இவர் ஸ்ரீவி – ராஜபாளையம் ரயில்வே தண்டவாளம் பகுதியில் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார் என போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே போலீசாரின் விசாரணையில், அவர் செங்கோட்டை – மயிலாடுதுறை ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக ஸ்ரீவி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாசு விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என நவ.10ல் முதல்வர் அறிவித்தார். இந்த திட்டம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில், 2024 நவ.10க்கு முன், பின் நிகழ்ந்த விபத்துக்களில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகள், நவ.10 அன்று 18 வயது நிறைவடையாதவர்களாகவும் இருந்தால் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 98659 58876, 93447 45064 எண்களை அணுகலாம் *ஷேர்
விருதுநகர் மாவட்ட தொழில் மையம் சார்பாக அருப்புக்கோட்டை புளியம்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் கலையரங்கத்தில் வரும் 5 ம் தேதி புதன்கிழமை காலை 10 மணி அளவில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. கடன் உதவி தேவைப்படும் தொழில் முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் சிவகாசி வட்டம், திருத்தங்கல் சீ.ரா.அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் இன்று (03.03.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்வு மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடிதம் ஒன்றை கைப்பட எழுதியுள்ளார். அதில், மாணவச் செல்வங்களே, இது முக்கியமான தேர்வு. அச்சமும் அவநம்பிக்கையும் நமக்கு அவசியமற்றவை. கவனமும் உழைப்பும் மட்டுமே வெற்றிக்கு அடிப்படை. 3 மணி நேரத்தையும் தேர்வறையில் சிறப்பாக பயன்படுத்துங்கள். முடிந்ததை முழுமையாகச் செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது.இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன.விருதுநகர் மாவட்டத்திற்கு 46 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். <
சிவகாசி அருகே கொங்கலாபுரம் பகுதியில் போலீசார் நேற்று சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமலை திருப்பதி நகரை சேர்ந்த சுரேந்திரபாபு என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட சுரேந்திரபாபு உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார் அங்கிருந்து சுமார் 5,000 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் டிராக்டர் ஓட்டும் பயிற்சி மதுரையில் வழங்கப்படுகிறது. 22 நாள் நடைபெறும் இப்பயிற்சியில் 25 பேர் கலந்து கொள்ளலாம். இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 45 வயதிற்குள் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94436 77046, 99443 44066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தினம் மார்ச் 4 அன்று கொண்டாடப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரின் பக்தர்கள் அதிகம் உள்ள விருதுநகர் மாவட்டத்துக்கும், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென்று, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.