Virudunagar

News August 29, 2024

வெம்பக்கோட்டையில் கண்களை கவரும் கண்ணாடி மணிகள்

image

வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3 ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா, ஆரஞ்சு ஆகிய நிறங்களிலான கண்ணாடி மணிகள் கிடைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு கண்ணாடி மணிகள் தயாரிப்பு கூடம் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இங்கு சங்கு வளையல் கூடம் இருந்ததற்கான சான்று கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

News August 29, 2024

துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்

image

சிவகாசி அருகே குமிழங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மினரல் வாட்டர் நிறுவன உரிமையாளர் சௌந்தரராஜ். இவர் கடந்த 16 ம் தேதி எரிச்சநத்தம்-அழகாபுரி சாலையில் உள்ள தனது மினரல் வாட்டர் கம்பெனியில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மேலும் கொலை செய்த நபர்கள் இவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து சென்றனர். இச்சம்பவம் நடந்து 2 வாரங்களாகியும் இதுவரை குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

News August 29, 2024

விநாயகர் சிலை இங்கு தான் கரைக்க வேண்டும்

image

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யும் விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் சிவகாசி நகர் பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகளை தெய்வானை நகரில் உள்ள பயன்படாத கிணற்றிலும், எம்.புதுப்பட்டி மற்றும் மாரனேரி பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் மாரனேரி கண்மாயில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News August 29, 2024

செங்கோட்டை – திருப்பதி ரயில் இயக்கிட கோரிக்கை

image

சிவகாசியை சேர்ந்த ரயில்வே கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் JK பாலசுப்ரமணியனிடம் சிவகாசி வர்த்தக சங்கம் பிரதிநிதிகள் இன்று மனு அளித்தனர். மனுவில், செங்கோட்டையிலிருந்து திருப்பதிக்கு ஆண்டாள் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் நேரடி ரயில் இயக்கிடவும், இரவு 8 மணிக்கு மேல் மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு இரவு நேர ரயில் இயக்கிடவும்,சிவகாசியில் 3வது நடைமேடை அமைக்கவும் ரயில்வே அமைச்சரை வலியுறுத்த வேண்டுகோள் விடுத்தனர்.

News August 28, 2024

பாஜக தலைவரை கைது செய்யக்கோரி புகார்

image

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றிய நகர அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் காரியாபட்டி காவல் நிலையத்தில் இன்று (ஆக.28) புகார் அளித்தனர். தொடர்ந்து காவல் நிலையம் முன்பு அண்ணாமலையை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர்.

News August 28, 2024

விருதுநகரில் நாளை விளையாட்டு போட்டி

image

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேஜர் தயான்சந்த் பிறந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நாளை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆர்வமுள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2024

விருதுநகரில் தொழிலதிபர்க்கு அரிவாள் வெட்டு

image

விருதுநகர் என் ஜி ஓ காலனி நேரு தெருவை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜெயராஜ்(51). இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வீட்டில் இருந்த போது மர்ம நபர் ஒருவர் திடீரென ஜெயராஜை அரிவாளால் வெட்டி அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இது தொடர்பாக கோல்வார்பட்டியைச் சேர்ந்த முத்துகுமார்(27) என்பவரை கைது செய்தனர்.

News August 28, 2024

89 வயதில் தடகள போட்டியில் வென்ற முதியவர்

image

சிவகாசியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 89). இவர் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தடகள போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகிறார். இவர் கடந்த வாரம் சுவீடன் நாட்டில் நடைபெற்ற உலக முதியோர் தடகள போட்டியில் இந்தியா சார்பில் 4 பிரிவுகளில் கலந்து கொண்டு வெண்கல பதக்கமும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். சிவகாசி திரும்பிய அவரை அசோகன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து வாழ்த்தினர்.

News August 28, 2024

பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான ஓராண்டு, இரண்டு தொழில் பிரிவுகளில் சேர பயிற்சியாளர்களுக்கு நேரடி சேர்க்கைக்கு ஆக.31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2024

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சென்னையில் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 6 வரை கண்காட்சி நடைபெற உள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களது உற்பத்தி பொருட்களை அங்கு சந்தைப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!