Virudunagar

News September 22, 2024

விருதுநகரில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

image

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் 23 ஆம் தேதி மாவட்ட அளவில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் பிரபல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.

News September 21, 2024

மாணவர்களின் வீடுகளுக்கு செல்லும் விருதுநகர் கலெக்டர்

image

விருதுநகர் நகராட்சிப் பகுதிகளில் இன்று(செப்.21) பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை சந்தித்து, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை தொடரவும், வேலைவாய்ப்பை பெறுவதற்கும் உரிய வழிகாட்டுதலை வழங்கி, மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு தொடர்புடைய அலுவலர்களை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

News September 21, 2024

ராஜபாளையம் அருகே ரூ.3 கோடி நிலம் மீட்பு

image

ராஜபாளையம் அருகே தேவதானத்தில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 103 ஏக்கர் நிலம் தேவதானம் அம்மையப்பா கூட்டுறவு விவசாய சங்கத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. கூட்டுறவு சங்கம் முறையாக குத்தகை பணம் செலுத்தாததால் மாவட்ட வருவாய் நீதிமன்ற உத்தரவில் அறநிலையத்துறை உதவி ஆணையாளர் வளர்மதி தலைமையில் ரூ.3 கோடி மதிப்பிலான 103 ஏக்கர் குத்தகை நிலத்தை மீட்டனர்.

News September 21, 2024

மாட்டு வியாபாரி அடித்துக் கொலை

image

வெம்பக்கோட்டை சத்திரப்பட்டியை சேர்ந்த மாட்டு வியாபாரி சோலையப்பனுக்கும் (60), தாயில்பட்டி பால்ராஜுக்கும் மாடு வாங்கி விற்பதில் முன்பகை இருந்துள்ளது. இதனால் பால்ராஜ் உள்ளிட்ட 5 பேர் சோலையப்பனை கம்பு, கற்களால் தாக்கினர். காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சோலையப்பன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி பால்ராஜ், வரதராஜ், பாலா உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

News September 20, 2024

பள்ளியில் வைத்து விஷம் குடித்ததால் பரபரப்பு

image

ஸ்ரீவி.,அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஸ்ரீவி.,புனித இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவி வகுப்பறையில் வைத்து மக்காச்சோளம் பயிருக்கு தெளிக்கும் கலைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டு ஸ்ரீவி.,அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.நகர் போலீசார் விசாரணை.

News September 20, 2024

ஊராட்சி செயலர்கள் கடிதம் அனுப்பும் போராட்டம்

image

விருதுநகரில் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என கோரி தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் தலைமைச் செயலர், அமைச்சர் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஏராளமான ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

News September 19, 2024

கலசலிங்கம் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது

image

கிருஷ்ணன்கோவில் பகுதியில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து மதுவிலக்கு, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கிருஷ்ணன்கோவில் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கல்லூரியில் படித்து வரும் ஆந்திராவை சேர்ந்த ராஜவிக்ரம் ஆதித்யாரெட்டி, ரோகித்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News September 19, 2024

பசுமை தீர்ப்பாயத்தை அணுகி நிவாரணம் பெற ஐகோர்ட் உத்தரவு

image

2021 இல் ஏழாயிரம்பண்ணை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.20 லட்சம் வழங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த கோரிய வழக்கில் மனுதாரர் தேசிய பசுமை தீர்பாயத்தை அணுகி நிவாரணம் பெற மதுரை ஐகோர்ட் உதரவிட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத, அதிகாரிகளுக்கு சிறை தண்டனையும் ரூ.10 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க அதிகாரம் உள்ளது.

News September 19, 2024

பட்டாசு ஆலை விபத்தில் ரூ.3 லட்சம் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டம், குகன்பாறையில் இன்று ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த கோவிந்தராஜ் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன் ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்து சிகிச்சை பெறும் குருமூர்த்திக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

News September 19, 2024

பட்டாசு ஆலை விபத்து- போர்மேன் கைது

image

ஏழாயிரம்பண்ணை அருகே குகன்பாறையில் லட்சுமி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் ஒருவர் படுகாயமடைந்தார்.
விபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் பாலமுருகன் மற்றும் போர் மேன் கபில் ராஜ் ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்த போலீசார் ஆலையின் போர்மேன் கபில் ராஜை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் பாலமுருகனை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!