India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் அருகே கட்டிட வேலை செய்து வருபவரின் மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். மகளின் மீது இச்சை கொண்ட தந்தை மனைவி இல்லாதபோது மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து அச்சிறுமி பள்ளி ஆசிரியரிடம் தெரிவிக்க அவர் 1098 க்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். சிறுமி அளித்த வாக்கு மூலத்தின் பேரில் சிறுமியின் தந்தையை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே ஆமத்தூர் பகுதியில் ஆமத்தூர் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது கருப்பசாமி மற்றும் கூடலிங்கம் ஆகிய இருவர் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக பட்டாசு திரிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த பட்டாசு திரிகளை பறிமுதல் செய்தனர்.
ஏழாயிரம்பண்ணை, அன்பின்நகரம் , தாயில்பட்டி, துரைச்சாமிபுரம், விஜயகரிசல்குளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு மற்றும் கருந்திரி தயாரிக்கப்படுகிறதா என இன்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 4 இடங்களில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த ஏசுதாஸ், மைக்கேல் ராஜ், பாண்டியன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 60 கிலோ பட்டாசுகள், 30 குரோஸ் கருந்திரிகள் பறிமுதல் செய்தனர்.
அருப்புக்கோட்டையில் நாகலிங்கா நகர் பகுதியில் அரசு கிளை நூலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்த அரசு கிளை நூலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாசகர்கள் மற்றும் நூலகரிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடி நூலகத்திற்கு சுகாதார வளாகம் போன்ற தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருவதாக உறுயளித்தார்.
ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்க மன்னார் எழுந்தருளுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை-காரியாபட்டி வழித்தட தனியார் பேருந்தில் காரியாபட்டியை சேர்ந்த வழக்கறிஞர் மரகதவள்ளியிடம் ரூ.28 கட்டணத்திற்கு பதில் ரூ.30 வசூலிக்கபட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.2 மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.15,000, வழக்கு செலவாக ரூ.10,000 என மொத்தம் ரூ.25002 வழங்க தனியார் பேருந்து நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முடிவுற்ற லோக்சபா தேர்தல் 2024 தொடர்பாக மக்களின் அறிவு, அணுகுமுறை, பழக்கவழக்கங்கள் குறித்த அடிப்படை ஆய்வு விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி, ராஜபாளையம், சாத்தூர் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. எனவே அரசு அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
விருதுநகர் தனியார் பெண்கள் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் விளையாட்டு துறை சார்பில் மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான மேஜை பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இந்த மேஜை பந்து போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டியை சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த பழனிச்சாமி உயர் சாதியை சேர்ந்த கிருஷ்ணவேணியை காதலித்து கடந்த மாதம் பெண்ணின் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் பெண்ணின் வீட்டார் இருவரையும் காரில் கடத்திச்சென்று கொலை செய்ய முயற்சித்தனர். இதையறிந்த போலீசார் திரைப்பட பாணியில் விரட்டி சென்று இளம் தம்பதியை மீட்டு பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல இன்று முதல் வனத்துறை அனுமதித்துள்ளது.இன்று முதல் செப்.3, வரை சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்லலாம். ஆவணி மாத பிரதோஷம், அமாவாசையை ஒட்டி சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல அனுமதி வனத்துறை வழங்கியுள்ளது. இதை முன்னிட்டு இன்று சதுரகிரி சுந்த மகாலிங்கரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
Sorry, no posts matched your criteria.