Virudunagar

News December 26, 2024

சிவகாசி 2 நாட்கள் உணவு திருவிழா

image

சிவகாசியில் வரும் 28 & 29 ஆகிய நாட்களில் “சுவையுடன் சிவகாசி” என்ற தலைப்பில் இசையுடன் கூடிய உணவு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் சைனீஸ், அரேபியன், மெக்சிகன், இந்திய பாரம்பரிய உணவு என உலகத்தில் உள்ள அனைத்து உணவுகளையும் சுவைக்க 60 ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் பிரபல சூப்பர் சிங்கர்ஸ் பாடகர்கள், யூடியூப்பர் கோபி & சுதாகர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி, வான வேடிக்கை, மேஜிக் ஷோ நடைபெற உள்ளது.

News December 26, 2024

ரங்கராஜன் நரசிம்மன் நீதிமன்றத்தில் ஆஜர்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் நற்பெயர்க்கும், தமிழக முதல்வர் குடும்பத்திற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு வீடியோ பதிவு வெளியிட்ட யூடூபர் வெளியிட்டாளர் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன், திருவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் நிர்வாகி சக்திவேல் ராஜன் தந்துள்ள புகாரின் பேரில் சிவகாசி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்: 2 காவல்துறையினரால் ஆஜர்.

News December 26, 2024

ரெங்கராஜன் நரசிம்மன் புழல் சிறையில் கைது

image

ஸ்ரீவி மணவாள மாமுனிகள் மடத்தின் பீடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர் ஜூன் மாதம் சென்னை புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். இதுகுறித்து ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர் சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசி வீடியோ பதிவு வெளியிட்டார். ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், ஸ்ரீவி,ஜீயர் புகாரியில் அவரை இன்று கைது செய்தனர்.

News December 26, 2024

சிவகாசி மாநகராட்சிக்கு முதலிடம்

image

தமிழகம் முழுவதும் சென்னையை தவிர்த்து, 24 மாநகராட்சிகள் உள்ளன. சொத்து வரி, காலி மனை வரி, நிறுவனங்களின் தொழில் வரி, குடிநீர் வரி ஆகியன வசூலிக்கப்படுகிறது. நடப்பாண்டில் மாநகராட்சிகளின் வரி வசூல் விபரம் வெளியானது. இதில், மாநில அளவில் சிவகாசி மாநகராட்சிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதுவரை நிலுவை வரியாக, ரூ.56.31 லட்சம், நடப்பாண்டு வரியாக, ரூ.15.56 கோடி என மொத்தம், ரூ.16.12 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2024

ரெங்கராஜன் நரசிம்மன் புழல் சிறையில் கைது

image

ஸ்ரீவி மணவாள மாமுனிகள் மடத்தின் பீடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர் ஜூன் மாதம் சென்னை புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். இதுகுறித்து ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர் சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசி வீடியோ பதிவு வெளியிட்டார். ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், ஸ்ரீவி,ஜீயர் புகாரியில் அவரை இன்று கைது செய்தனர்.

News December 25, 2024

பணி நேரத்தில் போதையில் இருந்த போலீசார் மாற்றம்

image

ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ., யாக பணியாற்றி வரும் மோகன்ராஜ் (53) என்பவர் பணி நேரத்தில் போதையில் இருந்ததாகவும், சக போலீசாருக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது. இது குறித்து டி.எஸ்.பி. ப்ரீத்தி விசாரனை நடத்தி மோகன்ராஜை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார். துறைரீதியிலான விசாரணைக்குப்பின் நடவடிக்கை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

News December 25, 2024

குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் மாவட்டம் தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 27 முதல் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News December 25, 2024

தென்னை மரங்களை வேரோடு சாய்த்த காட்டு யானை

image

ஸ்ரீவி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரமான செண்பகத்தோப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் உலாவி வருகின்றன. அந்த யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலத்திற்குள் புகுந்து தென்னை மற்றும் மா மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தி வருவதால் இரவு நேரங்களில் தோட்டத்திற்கு செல்லும் விவசாயிகள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே வனத்துறையினர் நடவடிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 25, 2024

யூரியா கலந்த அரிசி சாப்பிட்டு 6 ஆடுகள் உயிரிழப்பு 

image

மைலி இலுப்பைகுளம் பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவருக்கு சொந்தமான சுமார் 6 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த நிலையில்  மிதலைக்குளம் கண்மாய் பகுதியில் அரிசியுடன், யூரியா கலந்து விஷம் வைத்ததால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 25, 2024

விருதுநகர்: காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து அறிவியல் கண்காட்சியில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த 50 மாணவர்களுடன் ‘காபி வித் கலெக்டர்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கினார்.

error: Content is protected !!