India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் விருதுநகரைச் சேர்ந்த ஆதி ஸ்ரீவிவேகா கடந்த செமஸ்டரில் தோல்வியடைந்த பிசியாலஜி பாடத்தை மீண்டும் எழுதிய நிலையில், அதிலும் தோல்வி அடைந்ததால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் மற்றும் மருத்துவர் கல்லூரி நிர்வாகம் தரப்பில் விசாரணை.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை அளவு குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் (செப்.,3) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்யுதா? COMMENT பண்ணுங்க.
விருதுநகர் மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய 11 தாசில்தார்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடியாக மாற்றம் செய்துள்ளார். குறிப்பாக பறக்கும் படை தனி தாசில்தாராக பணியாற்றிய ராஜ்குமார் விருதுநகர் தாசில்தார் ஆகவும், நிலை எடுப்பு பிரிவு தனி தாசில்தார் பாலமுருகன் ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தாராகவும், திருச்சுழி தாசில்தாராக பாண்டியராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி தாசில்தார் வடிவேல் விடுமுறையில் செல்வதால் அவருக்கு பதில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு முன்னாள் நேர்முக உதவியாளர் லட்சம் பொறுப்பு தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். பறக்கும்படை தனி தாசில்தார் ராஜ்குமார், விருதுநகர் தாசில்தாராகவும், நில எடுப்பு மற்றும் மேலாண்மை அலகு (சிவகாசி) தனி தாசில்தார் சந்திரசேகரன், சிவகாசி சப்-கலெக்டர் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான நாடக சாலை தெருவில் உள்ள ஸ்ரீதிருவேங்கடமுடையான் திருக்கோவிலில் உற்சவ விழா ஆக.30 ஆம் தேதி தொடங்கி செப்.2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 4ஆம் நாளான இன்று கருட சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விருதுநகர் அருகே மேல வளையப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் அழகுமுருகன் (25). இவர் நேற்று இரவு கோட்டூர் பாலவனத்தம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் அழகு முருகன் மற்றும் மாரீஸ்வரன்(29) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பின்னால் அமர்ந்திருந்த சிவா என்பவர் காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் திமுக அரசின் அலட்சியத்தால் தமிழகத்தில் இன்று பல ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்காத அவல நிலை உள்ளது. சென்னையில் கார் பந்தயம் நடத்துவதற்கு என்றே இடங்கள் உள்ள நிலையில் மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் கார் ரேஸ் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் ஏன்?. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மதுரை செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே மழை நீர் வடிகால் செல்ல சிறிய பாலம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசு நெடுஞ்சாலை துறையினர் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டி வருகின்றனர். பாலம் கட்டுமான பணிகளை நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் திருமால் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிவகாசி அருகே வெற்றிலையூரணி ஆனைக்கூட்டம் பகுதியில் நீர் ஆதாரம் உள்ளது.இதனால் இப்பகுதியில் அதிகமான மான்கள் உணவிற்காக வசிகின்றன. இவைகள் அவ்வபோது உணவைத் தேடி வெளியில் வரும்போது சாலையில் வாகனங்களால் அடிபட நேரிடுகின்றது அடிக்கடி இது போன்ற சம்பவம் நிகழ்வதால் மான்களின் எண்ணிக்கை குறைகிறது.எனவே இப்பகுதிகளில் மான்கள் சரணாலயம்
அமைக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான நாடக சாலை தெருவில் உள்ள ஸ்ரீதிருவேங்கடமுடையான் திருக்கோவிலில் உற்சவ விழா ஆக.30 ஆம் தேதி தொடங்கி செப்.2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 3 ஆம் நாளான நேற்று தோரண கும்பமண்டல திருவாராதனம், பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, சமேத திருவேங்கடமுடையான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
Sorry, no posts matched your criteria.