India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமாவிற்கு சொந்தமான ஒருங்கிணைந்த சுகாதார மையத்தில் விரிவாக்கப்பட்ட கட்டட திறப்பு விழா வரும் செப். 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்க உள்ள நிலையில், அவரிடம் திலகபாமா நேரில் அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தார். மேலும் அன்றைய தினம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் வாழை பயிருக்கு காப்பீடு செய்வதற்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பிரீமியம் தொகையாக ஒரு ஏக்கர் வாழைக்கு ரூபாய் 3404 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் செப்-16 ஆகும். கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பங்களை பெற்று பயிர் காப்பீடு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே எஸ்.திருவேங்கிடபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது . இதில் கிராமத்தில் உள்ள அரசரடி விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பணமாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ராஜபாளையம் சுரங்கப்பாதை பணிகள் காரணமா செங்கோட்டை – மதுரை ரயில் செப். 8, 9 ஆகிய நாட்களில் செங்கோட்டையிலிருந்து 50 நிமிடங்கள் கால தாமதமாக மதியம் 1 மணிக்கு புறப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சுரங்கப்பாதை பணிகளில் முக்கிய பணிகள் நிறைவு பெற்றதால் செப். 8, 9 ஆகிய நாட்களில் செங்கோட்டை -மதுரை ரயில் செங்கோட்டையிலிருந்து வழக்கமாக புறப்படும் நேரமான மதியம் 12.10 மணிக்கு புறப்படும்.
வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முழுமையான செங்கல் கட்டுமான சுவர் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதன் புகைப்படத்தையும், அதன் விவரங்களையும் வெளியிட்டுள்ள தமிழக அரசு முன்னோர்களின் தொழில் குணமாக இருக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை வருவாய் கோட்டத்தில் பணிபுரிந்து வந்த 5 கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்கி கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி அருப்புக்கோட்டை கோட்டத்தில் பணிபுரிந்து வந்த கிராம உதவியாளர்கள், கருப்பசாமி, சுந்தரி, தெய்வக்கனி , சூரியமூர்த்தி மற்றும் சுரேஷ் ஆகிய ஐந்து பேருக்கு கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை வருவாய் கோட்டத்தில் பணிபுரிந்து வந்த 5 கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்கி கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி அருப்புக்கோட்டை கோட்டத்தில் பணிபுரிந்து வந்த கிராம உதவியாளர்கள், கருப்பசாமி, சுந்தரி, தெய்வக்கனி , சூரியமூர்த்தி மற்றும் சுரேஷ் ஆகிய ஐந்து பேருக்கு கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன், ராணுவ வீரர். இவர், சிக்கிம் மாநிலம், ரெனோக்-ரோங்க்லி நெடுஞ்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தபோது, 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். இதையடுத்து தங்கபாண்டியனின் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “அருங்காட்சியகத் துறையின் மூலம் சென்னையில் அமைக்க உள்ள சுதந்திர தின அருங்காட்சியகத்திற்காக பொதுமக்களின் பங்களிப்பை கூறும் வகையில், இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பான பொருட்கள் இருப்பின் நன்கொடையாக வழங்கலாம்” என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 7ம் தேதி வரை கே வி எஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மூன்றாவது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பொதுமக்களுக்கான குறு மாரத்தான் போட்டி வரும் 15ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. போட்டியானது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்க உள்ளது.
Sorry, no posts matched your criteria.