Virudunagar

News October 9, 2024

தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் விருதுநகர் பேராசிரியர்

image

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றுபவர் ராமன். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி இந்த ஆண்டு பட்டியலில் இவர் இடம் பெற்றுள்ளார். இவரது சாதனையை கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர்.

News October 8, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; விருதுநகர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களை விற்பனை செய்வது மற்றும் சேமித்து வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு இது போன்ற நெகிழி பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 8, 2024

விருதுநகரில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமா?

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (அக்.08) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் சட்டப்படி தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பம் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் இணைய வழி (www.tnesevai.tn.gov.in) வாயிலாக வரும் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

விருதுநகர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

image

அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று (அக்.8) நடைபெற்றது.14 புதிய முதலீட்டு திட்டங்களுக்காக ரூ.38,698 கோடி முதலீட்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்தின் மூலம் தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்ட இளைஞர்கள் 46,931 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

News October 8, 2024

சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (54). கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் சாட்சியாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்து ஏற்படுத்திய ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News October 8, 2024

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இருவர் கைது

image

சிவகாசி வெம்பக்கோட்டை சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த சரஸ்வதி பாளையத்தை சேர்ந்த ராஜபாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் நதிக்குடியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த சூரிய பிரகாஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவருக்கும் கஞ்சா சப்ளை செய்யும் நபர்களை தேடி வருகின்றனர்.

News October 7, 2024

புத்தகத் திருவிழா மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

image

விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 3 ஆவது புத்தக திருவிழா நடைபெற்றது வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் பார்வையிட்டு தேவையான நூல்களை வாங்கிச் செல்கின்றனர். புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவடைய உள்ளதை தொடர்ந்து அதனை மேலும் நீண்டிக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து மேலும் 3 நாட்கள் அதாவது அக்.10 வரை புத்தக திருவிழா நீட்டிக்கப்பட்டுள்ளது.

News October 7, 2024

புத்தகத் திருவிழா இன்று கடைசி நாள்

image

விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 3 ஆவது புத்தக திருவிழா நடைபெற்றது வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு துறைகளின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் பார்வையிட்டு தேவையான நூல்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் 3 ஆவது புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.

News October 7, 2024

5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

வங்ககடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது தெற்கு ஆந்திரா – வடதமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு – தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று(அக்.7) முதல் அக்.11 வரை விருதுநகர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE IT

News October 6, 2024

புத்தகத் திருவிழாவில் நூலை வெளியிட்ட நடிகர் சிவக்குமார்

image

மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் 3வது புத்தகத் திருவிழாவின் மைய நோக்கம் “மரமும் மரபும்” சுற்றுச்சூழலையும், நமது பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தல் தொடர்பாக பெறப்பட்ட 81 படைப்புகளில் தேர்வுக்குழுவினால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த 32 படைப்புகளை தொகுத்து, சிறுகதை தொகுப்பு மரமும், மரபும் என்ற பெயரில் நூலாக ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில், நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்.

error: Content is protected !!