Virudunagar

News September 13, 2024

விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப்டம்பர் 20 காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News September 13, 2024

அகில இந்திய தொழில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழில் பயிற்சி குடும்பத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வராக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News September 13, 2024

பந்தல்குடியில் லாரி மோதியதில் ஒருவர் பலி

image

அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி(55). இவர் தனியார் நிறுவனத்தில் தோட்ட வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வேலுச்சாமி பந்தல்குடியிலிருந்து தனியார் சிமெண்ட் கம்பெனி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியட்தில் வேலுச்சாமி உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 12, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை விற்பனை கண்டுபிடிக்கப்பட்டால் முதல் முறை ரூ.25,000 அபராதமும் 15 நாட்கள் கடை மூடி சீல் வைக்கப்படும். இரண்டாவது முறை தவறு செய்தால் ரூ.50,000 மற்றும் ஒரு மாதம் கடை மூடி சீல் வைக்கப்படும். மூன்றாவது முறையாக தவறு செய்தால் ரூ.1 லட்சம் அபராதமும் மூன்று மாத கடை மூடி சீல் வைக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News September 12, 2024

துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

விருதுநகர் மாவட்டத்தில் துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக விருதுநகர் மண்டல துணை தாசில்தார் ராதாகிருஷ்ணன் தேர்தல் துணை தாசில்தார் ஆகவும், திருச்சுழி மண்டல துணை தாசில்தார் ராஜாராம் பாண்டியன் தேர்தல் துணை தாசில்தார் என மாவட்டத்தில் 6 துணை தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

News September 12, 2024

ஆர்டர் கொடுக்க வராததால் பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை

image

விருதுநகர், சிவகாசி, சாத்துார் சுற்றுப்பகுதியில் 1,080 பட்டாசு ஆலைகள் உள்ளன. நாட்டின் மொத்த உற்பத்தியில், 95 சதவீத பட்டாசுகள் இங்கு தான் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் பட்டாசு வெடிக்க பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் செய்கை தெரியாது நிற்கும் அங்குள்ள வியாபாரிகள் இதுவரை சிவகாசிக்கு மொத்த ஆர்டர் கொடுக்க வராததால் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் கவலையில் உள்ளனர்.

News September 12, 2024

பஞ்சாயத்து தலைவர் மீது வழக்கு பதிவு

image

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே கொங்கன்குளம் கிராமத்தில் போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது கொங்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் தனது கோழிப்பண்ணையில் வைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், பட்டாசு தயாரித்த பாலமுருகன் மீது வழக்கு பதிந்து பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

News September 11, 2024

கடந்த 7 நாட்களில் 9 கடைகளுக்கு சீல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்டம் முழுவதும் போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரையில் மட்டும் 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 9 கடைகள் மற்றும் ஒரு வாகனத்திற்கு ரூ.2,50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 11, 2024

விருதுநகர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

ராஜபாளையம் துணைமின் நிலையம் மற்றும் அருப்புக்கோட்டை அருகே முத்து ராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செப். 12) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் பணிகள் காரணமாக மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 11, 2024

தொழிலதிபர் கொலையில் 50 பேரிடம் விசாரணை

image

சிவகாசி அருகே குமிழங்குளம் கிராமத்தை சேர்ந்த மினரல் வாட்டர் நிறுவன உரிமையாளர் சௌந்தர்ராஜன் (84) கடந்த 16 ம் தேதி அதே நிறுவனத்தில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 50 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் திணறும் போலீசார் இரண்டு தனிப்படை அமைத்து மதுரை உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டு விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!