India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசி அருகே செவலூரில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று மாலை இடி, மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட தீ விபத்தில் பணியில் இருந்த காந்தியம்மாள் (73) என்ற பெண் தொழிலாளி 100 சதவீத தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் வழங்கப்படும் விருதுகளுக்கு விருதுநகர் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதில் முதல் பரிசு ரூ.1 லட்சம், 2 ஆம் பரிசு ரூ.60,000, 3 ஆம் பரிசு ரூ.40,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள்<
சிவகாசி அருகே செவலூரில் கணேசன் என்பவருக்கு சொந்தமான சோனி பட்டாசு ஆலையில் இன்று சுமார் 200 பணியாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி, மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட வெடி விபத்தில் ரசாயண மூல பொருட்களை கையாண்ட காந்தியம்மாள் (73) என்ற பெண் தொழிலாளி பலத்த தீக்காயமடைந்தார். 100 சதவீத தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
விருதுநகர் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 58 விற்பனையாளர் மற்றும் 13 பணியிடங்கள் விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் வாயிலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன விற்பனையாளருக்கு பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான கல்வி, கட்டுநருக்கு 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் www.drbmadurai.net என்ற இணையத்தில் நவம்பர் 7ஆம் தேதி மாலை 5.40 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை சிப்பிப்பாறை வழியாக ஏழாயிரம்பண்ணைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சிப்பிப்பாறை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது கார் மற்றும் பைக்கில் கடத்தி வரப்பட்ட 90 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சா கடத்திய தினேஷ்குமார், கணேஷ்குமார், அய்யனார் ஆகிய 3 பேரை கைது செய்து கஞ்சா, கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் வெள்ளைத்துரைபாண்டியன் (47). சிவகாசி திமுக மாநகர பொருளாளரான இவர், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நிதி நிறுவனத்தில் திருத்தங்கலை சேர்ந்த அருண் ஆலங்குளம் கிளையில் மேனேஜராக வேலை செய்து வந்தார். அருண் ரூ.18 லட்சத்தை இழப்பு ஏற்படுத்தி நம்பிக்கை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து நிதி நிறுவன உரிமையாளர் கிடைத்த புகாரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்களுக்குள் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக குறைந்தபட்சம் 2 ஏக்கரில் 3 ஜவுளி உற்பத்தி தொழில் கூடங்கள் அமைக்க வேண்டும். எனவே ஆர்வமுள்ள தொழில் முனைவோர் துணிநூல் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி விருதுநகர் ஹாஜிபி மேல்நிலைப் பள்ளியிலும், 24 ஆம் தேதி விருதுநகர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் குழந்தை திருமணம் தடைச் சட்டம் 2006 இன் படி குழந்தை திருமண சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கடந்த 2023 ஏப்ரல் 1 முதல் தற்போது 2024 மார்ச்.31 வரை 118 குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை விறுவிறுப்படைந்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் சிவகாசிக்கு நேரடியாக பட்டாசு வாங்க வருகின்றனர். பட்டாசுகளை வாங்கி செல்வோர் ரயில்,பேருந்துகளில் கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரயிலில் பட்டாசு கொண்டு செல்வது கண்டறியப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.