Virudunagar

News October 19, 2024

குடும்பத்தோடு கூலித்தொழிலாளியை கொலை செய்த கொடூரம்

image

சிவகாசி அருகே நாரணாபுரத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜசேகரன் (40). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வைர பிரகாசத்திற்கும் ஏற்பட்ட தகராறில் ராஜசேகரன் வைர பிரகாசத்தை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வைர பிரகாஷ் அவரது தந்தை விநாயக மூர்த்தி, சகோதரர் விக்ரமனை அழைத்து சென்று ராஜசேகரனை கத்தி அரிவாளால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கொலை செய்த தந்தை மகன்கள்களை போலீசார் கைது செய்தனர்.

News October 19, 2024

விருதுநகரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் இன்று (அக்.18) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News October 18, 2024

சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

image

2006-2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் மனைவி மணிமேகலை மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்து ஸ்ரீவி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் சீராய்வு மனுவை தாமாக முன்வந்து விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எடுத்தது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணையை நவ.15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News October 18, 2024

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (அக்.19) மின் குறைதீர் முகாம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு தாலுகாவில் வசிக்கும் மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்க விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா,(அக். 19) அன்று 11 மணி முதல் 1 மணி வரை ஸ்ரீவி., கோட்டைப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் குறைகளை கேட்டறிய உள்ளார் என ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட செயற்பொறியாளர் சு.முனியசாமி தெரிவித்துள்ளார்.

News October 18, 2024

கூட்டு பாலியல் வழக்கில் கவுன்சிலருக்கு நீதிமன்ற காவல்

image

பரமக்குடியில் 9 ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அதிமுக நிர்வாகியும்,நகராட்சி கவுன்சிலருமான சிகாமணி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சிகாமணிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ஐகோர்ட் ரத்து செய்த நிலையில், நேற்று ஸ்ரீவி. நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து சிகாமணியை அக்.25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

News October 17, 2024

அக்.31ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை!

image

விருதுநகர் நகராட்சி ஆணையாளர் சுகந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2024-25ம் வருட இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் நகராட்சி அலுவலகம் மற்றும் கணினி வரி வசூல் மையத்தில் நேரடியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ செலுத்தலாம். அக்.31ம் தேதிக்குள் செலுத்துவோருக்கு வரியில் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News October 17, 2024

விருதுநகர் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை!

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களிலும் சட்ட விரோதமாக பட்டாசுகள் எடுத்துச்செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க விருதுநகர் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் செல்வி தலைமையில் சிறப்பு தனி படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் செல்வி தலைமையிலான காவல்துறையினர் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

News October 17, 2024

விருதுநகர் ரயில்களில் தனிப்படை அமைத்து சோதனை

image

விருதுநகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகர், சிவகாசி வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் சட்ட விரோத பட்டாசுகள் எடுத்து செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல் ரயில்வே ஸ்டேஷன்களிலும் ஆய்வு செய்யப்பட்டது.

News October 17, 2024

விருதுநகரில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (அக்.15) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 18ஆம் தேதி வெள்ளி அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை நாடுபவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News October 16, 2024

பட்டாசுக் கடைகளை கண்காணிக்க 14 குழுக்கள் அமைப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் நிரந்தர உரிமம் பெற்ற 2,400 பட்டாசுக் கடைகள் உள்ளன. இந்த பட்டாசுக் கடைகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதைக் கண்காணிக்க காவல்துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறையினர் அடங்கிய 14 குழுக்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அமைத்துள்ளார். இந்தக் குழுவினர் பட்டாசுக் கடைகளின் உரிமம், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை கண்காணிப்பர்.

error: Content is protected !!