India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

விழுப்புரம்: பாணாம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் ஏ.சேகா் (64). மதுப்பழக்கம் உடைய இவா் தினமும் வீட்டுக்கு மது அருந்தி வந்தாராம். இதை சேகரின் மனைவி பூங்காவனம், மகன் சபரிநாதன் ஆகியோா் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சேகா் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்யவர். (அ) 9445850811 இந்த வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் செய்யலாம். SHARE IT!

விழுப்புரம்: பிள்ளைச் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மு.பூரணி (45). இவர் தனது பைக்கில் பொம்மையாா்பாளையம் நோக்கி நேற்று சென்றுள்ளார். அப்போது, பைக்கில் பின்னால் வந்த தலைக்கவசம் அணிந்திருந்த மர்ம நபர், பூரணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம்: பிள்ளைச் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மு.பூரணி (45). இவர் தனது பைக்கில் பொம்மையாா்பாளையம் நோக்கி நேற்று சென்றுள்ளார். அப்போது, பைக்கில் பின்னால் வந்த தலைக்கவசம் அணிந்திருந்த மர்ம நபர், பூரணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம்: கக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது 45). கூலித்தொழிலாளியான இவர், வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது, திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அய்யனாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அய்யனார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் முனியன் (38). இவருக்கு கீர்த்திகா (32) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். முனியனிடம், கீர்த்திகாவின் அண்ணன் மூர்த்தி ரூ.40,000 கடன் வாங்கியுள்ளார். ஆனால் 6 ஆண்டுகளாகியும் அவர் திருப்பி தராததால், விரக்தியடைந்த முனியன் தனது மனைவியை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த கீர்த்திகா விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்
Sorry, no posts matched your criteria.