India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்தும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் மே 1ல் கிராமசபை கூட்டம் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டம் நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்படும். ஆனால் தற்போதுவரை மே 1 கிராம சபை கூட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும் மாவட்ட நிர்வாகம் அறிவிக்காததால் கூட்டம் நடைபெறாது என தெரிகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கம்பந்தூர் கிராமத்தை சேர்ந்த திவ்யா என்ற கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்த நிலையில், நேற்று(ஏப்.28) சிகிச்சை பலனின்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் திவ்யா உயிரிழந்தார். இதனை அடுத்து, சரியான முறையில் சிகிச்சை அளிக்காததே உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை எதிரே உள்ள நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமங்கலம் ஒன்றியம் T.புதுகுப்பம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மனுக்கு நேற்று இரவு கல்யாண வைபோகம் திருமணம் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் திருக்கல்யாண கோலத்தை கண்டு களித்தனர். அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பல்வேறு பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
சுட்டெரிக்கும் வெயிலை தாங்கும் விதமாக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர், மோர் பந்தல் திறக்க அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அந்த வகையில் திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி. வி.சண்முகம் ஐந்து இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல் இன்று பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கப்பட்டது.
விழுப்புரத்தில் இன்று 2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் காரில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் 2 கார்களில் கடத்தி செல்லப்பட்ட 2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட கோவிந்தராஜ், ஏழுமலை ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் செஞ்சி அனந்தபுரம் பகுதியில் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
விழுப்புரம் மாவட்டம், திருப்பாச்சனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பொன்னியம்மன், சப்த மாதாக்கள், ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தை புதுப்பித்து பஞ்சவர்ணம் தீட்டி புதியதாக நுழைவாயில் அமைத்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைக் கண்டுகளித்தனர்.
விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பகுதி நேரமாக மாவட்டம், தாலுகா வாரியாக பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் திறன் உடையவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 8340022122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.