India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அம்மாச்சார் அம்மன் ஆலய 24 -ஆம் ஆண்டு பிரஹ்மோத்தவ திருவிழா இன்று நடைபெற்றது. திருவிழாவில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, நேரில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இன்று (மே 7) தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே இன்று காலை தேமுதிக மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் தலைமையில் கோடை வெப்பத்தை தவிர்க்கும் வகையில், பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் கேப்டன் மன்ற மாநில செயலாளர் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நல்லாண்பிள்ளைபெற்றாள் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு விலங்கியல் பாடத்தில் ச.வசந்தி என்ற மாணவி நூற்றுக்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். அதேபோல், அப்பள்ளியின் 12ஆம் வகுப்பு தேர்ச்சி 97%. முதல் மதிப்பெண் கவியரசி – 511/600, 2ஆம் மதிப்பெண் பா.சந்தியா – 500/600, 3ஆம் மதிப்பெண் கோமதி – 494/600 பெற்றுள்ளனர்.
விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் CCTV கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி அவர்கள் நேரில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வானூர் தாலூகா கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 % தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். மாணவி சபிதா 537 மதிப்பெண்ணும், ஜனனி 520, ஷாலினி 510 மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்தப் பள்ளி வானூர் வட்டார பகுதியில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து வருகிறது. இந்த பள்ளிக்கு பொதுமக்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது. இப்பள்ளியில் தேர்வெழுதிய 197 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு ஊர்ப் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட தேர்ச்சி அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று வெளியிட்டார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், விழுப்புரம் மாவட்டத்தில் 93.17 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 90.42 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 95.71 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தென்னிந்திய கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதற்கு “கள்ளக்கடல்”என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி இன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு வரை நீடிக்கும் எனவும், 5 அடி முதல் 7 அடிவரை கடல் அலை சீற்றத்துடன் காணப்படும் என இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.