India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியாவில் 77 வது குடியரசு தினம் நாளை (ஜன.25) இந்தியா முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி இந்தியா முழுவதும் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரத்தில் போலீசார் விழா நடைபெறும் இடம், மற்றும் மக்கள் கூடும் இடங்களான ரயில்வே நிலையம் மற்றும் பேருந்து நிலையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் விவசாய மக்களுக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மின்மோட்டார் பம்பு செட் மானியத் திட்டம்,தற்போது அமலில் உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்பு செட் வாங்க ரூ.15,000 மானியம் வழங்கி வருகிறது.இதில்,விண்ணப்பிக்க தாங்கள் சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர்,வேளாண்மைப் பொறியியல் துறையில் தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.ஷேர் பண்ணுங்க

திண்டிவனம் வட்டம், அகூர், புது காலனி, முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சு.ரவிச்சந்திரன்(55) இவர், வெள்ளிக்கிழமை இரவு தனது மனைவி சுமதி மகள் சுபாஷினி ஆகியோருடன் பைக்கில் அகூர் அருகே சென்றார். அப்போது அங்கு வந்த தனியார் சொகுசுப் பேருந்து பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சுமதி உயிரிழந்த நிலையில் வெள்ளி மேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<

விழுப்புரம் மக்களே,அதிக மின் கட்டணம், மின்தடை,மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில் திங்கள்கிழமை (ஜன.26) காலை 8.05 மணிக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தேசியக் கொடியேற்றுகிறாா். இதைத் தொடா்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கன்னிகாபுரம் பகுதியில், நேற்று (ஜன. 24) சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர், வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின், மோதிய வாகனம் நிற்காமல் சென்ற நிலையில், மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியானவர் யார் மற்றும் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை தற்போது நிலவுகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் இன்று (ஜன.25) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்!

விழுப்புரம் மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <

விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் அருகே கண்ணாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோதண்டபாணி, நீண்டகால வயிற்று வலியால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். நேற்று வலி அதிகமானதால் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை அவர் உட்கொண்டார். முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.