Villupuram

News September 4, 2025

விழுப்புரம்: மதுவிலக்கு பிரிவு போலீசார் 51 பேர் இடமாற்றம்.

image

விழுப்புரம் மாவட்டத்தில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வந்த 51 போலீசாரை இடமாற்றம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, செஞ்சி மதுவிலக்கு பிரிவு ஏட்டு புனிதா விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கும், ஏட்டு கந்தன் தி.வெ.நல்லூர் காவல் நிலையத்திற்கும், திண்டிவனம் மதுவிலக்கு ஏட்டு ஏழுமலை மேல்மலையனூர் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News September 4, 2025

விழுப்புரம்: EB துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு

image

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும். வயது 18 முதல் 32 வரை இருக்கலாம். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. விருப்பமுள்ளவர்கள் அக்.02க்குள் விண்ணப்பிக்க வேண்டும் SHARE பண்ணுங்க

News September 4, 2025

என்ன தகுதிகள் இருக்க வேண்டும் 2/2

image

▶️ பெற்றோரில் ஒருவர் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ஆண்டு வருமானம் 1,20,000 க்குள் இருக்க வேண்டும்.
▶️இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்,
▶️ஒரே குழந்தை என்றால் அந்த குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்
*இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News September 4, 2025

விழுப்புரம்: குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.25,000 இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50.000 அரசு சார்பாக அவர்களின் பெயரில் ஒரு ரொக்கத்தொகை வரவு வைக்கப்படும். 18 வயதாகும் போது வட்டியுடன் சேர்த்து இந்த பணம் வழங்கப்படும். இதற்கு உங்கள் ஊரில் நடைபெற்று வரும் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிலும் விண்ணப்பிக்காலாம். ஷேர் IT <<17608117>>தொடர்ச்சி<<>>

News September 4, 2025

BREAKING: விழுப்புரம் அருகே விபத்து.. 10 பேர் காயம்

image

விழுப்புரம் அருகே இன்று காலை 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெஞ்சிசாலையில் விதை பண்ணை என்ற இடத்தில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் மற்றும் வேனில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News September 4, 2025

டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

விழுப்புரத்தை சோ்ந்தவா்கள் தமிழக அரசின் டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடா், பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த மக்களின் சமூக பொருளாதார, கல்வி நிலை, வாழ்க்கைத்தரத்தை உயா்த்துவதற்கு பங்காற்றியவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடா்,பழங்குடியினா் நல அலுவலத்தில் அக்.10க்குள் சமர்ப்பிக்க வேண்டும்

News September 4, 2025

விழுப்புரத்தில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு<<>> கிளிக் செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 3, 2025

இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 3, 2025

விழுப்புரம் மாவட்ட மக்கள் குறை தீர்வு கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று (செப்.03) நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் P.சரவணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக சமர்ப்பித்தனர். சமர்ப்பித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் உறுதி செய்தார்

News September 3, 2025

விழுப்புரம்: திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

image

திண்டிவனம் நகராட்சியில் பணிபுரியும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஊழியரை திமுக கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தொடர்பாக, திமுக கவுன்சிலர் ரம்யா மற்றும் நகரமன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!