Villupuram

News July 5, 2024

விழுப்புரத்தில் 4 நாட்கள் மூடல்: ஆட்சியர் உத்தரவு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ஜூலை 8,9,10 மற்றும் 13ஆம் தேதிகளில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News July 4, 2024

விழுப்புரத்தில் 4 நாட்கள் மூடல்: ஆட்சியர் உத்தரவு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ஜூலை 8,9,10 மற்றும் 13ஆம் தேதிகளில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News July 4, 2024

விழுப்புரத்தில் ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

image

விழுப்புரத்தில் தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக துஷ்பிரயோகம் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் இதை கண்டும் காணாமல் இருக்கிறது. தமிழ்நாடு அமைச்சர்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் விக்கிரவாண்டிக்கு மாற்றி இருப்பதாகவே தெரிகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை கவலைக்கிடமாக உள்ளதாக குற்றம்சாட்டினார்.

News July 4, 2024

விழுப்புரம்: தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தபால் வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அரசு அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோர் வாக்கு செலுத்திவருகின்றனர். வாக்குப்பதிவு குறித்து கலெக்டரும், மாவட்ட தலைமைத் தேர்தல் அதிகாரியுமான பழனி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

News July 4, 2024

அதிமுகவினர் பாமாவுக்கு வாக்களிக்கவும்: ராமதாஸ்

image

விக்கிரவண்டி இடைத்தேர்தலில், அதிமுகவினர் வாக்கை வீணடிக்காமல் பாமாவுக்கு வாக்களிக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். திண்டிவனம் அருகே உள்ள தைலதாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக வேட்பாளர் தோல்வி அடைந்து விடுவார் என்று தெரிந்ததும், திமுக அரசு அடக்குமுறையை கையாண்டு வருவதாகவும், அதிமுகவும் பாமகவுக்கு பொது எதிரி திமுக தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆசாரங்குப்பம் கிராமத்தில் திமுகவினர் ஓட்டுக்காக வேட்டி, சேலை வழங்க இருந்ததை தேர்தல் பறக்கும் படையினர் இன்று பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

News July 3, 2024

விக்கிரவாண்டியில் 28 அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம்

image

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராகிய அன்னியூர் சிவா வெற்றி பெற வைப்பதற்காக அக்கட்சியின் தேர்தல் பணிக்குழுவில் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் மேற்பார்வையில் 28 அமைச்சர்கள் இப்பொழுது களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீதி வீதியாக சென்று வாக்குகள் கேட்டு வருகின்றனர்.

News July 3, 2024

ஆட்சியரை சந்தித்து மனு வழங்கிய பாமகவினர்

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் அராஜகம் மேற்கொண்டு, வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் தருகின்றனர். மேலும், அன்புமணி ராமதாஸ் கூட்டத்திற்கு வரவிடாமல், வாக்காளர்களை தடுத்து நிறுத்துவதாகவும், இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பாமகவினர் மற்றும் பாமக வழக்கறிஞர் பாலு ஆகியோர் ஆட்சியர் பழனியிடம் மனு அளித்துள்ளனர்.

News July 3, 2024

திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆசாரங்குப்பம் கிராமத்தில் திமுகவினர் ஓட்டுக்காக வேட்டி, சேலை வழங்க இருந்ததை தேர்தல் பறக்கும் படையினர் இன்று பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

News July 3, 2024

விழுப்புரம்: பதற்றமான பகுதிகளில் போலீஸ் அணிவகுப்பு

image

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் வரும் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்காளர்கள் அஞ்சமின்றி ஜனநாயக கடமை ஆற்றுவதை உறுதி செய்யும் வகையில் தொகுதியின் பதற்றமான பகுதிகளில் இன்று போலீசார், மத்திய ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பில் ஈடுபட்டனர். இந்த அணிவகுப்பு ஏடிஎஸ்பி திருமால் தலைமையில் நடைபெற்றது.

error: Content is protected !!