Villupuram

News July 9, 2024

வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு பதிவு செய்யும் இயந்திரங்கள் அனுப்பும் பணி விக்கிரமாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. இந்த பணியினை, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் மேற்பார்வையில் அனைத்து வாக்கு மையங்களுக்கும் வேன் மூலமாக இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதேபோல், பணம் பட்டுவாடா நடைபெறுகிறதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.

News July 9, 2024

12 ஆவணங்களை பயன்படுத்தலாம்: ஆட்சியர்

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் திலீப் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப்பைப் பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிக்கலாம். அப்படி பூத் சிலிப் இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட 12 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News July 9, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஒரு பார்வை 3/3

image

விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு கடந்த 14ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் 24ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மொத்தம் 64 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 35 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போதைய சூழலில் 29 வேட்பாளர்கள் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் களம் காண்கின்றனர்.

News July 9, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஒரு பார்வை 2/3

image

மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணியை எதிர்த்து போட்டியிட்ட அபிநயாவும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, தேர்தல் களத்தில் திமுக, பாமக, நாதக என மும்முனை போட்டி உருவானது. இதனால், தங்கள் வேட்பாளரை ஆதரித்து கடந்த சில நாட்களாக, கட்சி தலைவர்கள் பலர் தெரு தெருவாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

News July 9, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஒரு பார்வை 1/3

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா களமிறங்குகிறார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணபலம், ஆளுங்கட்சி அராஜகம் உள்ளிட்டவற்றால் தேர்தலை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அதே நேரத்தில் வன்னியர் வாக்குகள் அதிகம் இருப்பதால் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் என அறிவித்தார் ராமதாஸ்.

News July 9, 2024

விக்கிரவாண்டி இடைதேர்தக்; தீவிர கண்காணிப்பு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இறுதி நேரத்தில் பண பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதி மீறல்கள் குறித்து கண்காணிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்திருக்கிறது. மேலும், துணை ராணுவம், காவல்துறையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

News July 9, 2024

விக்கிரவாண்டி: இடைத்தேர்தல் பணிகள் விறுவிறு

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்கு பதிவு இயந்திரம், பென்சில், பேனா, மை உள்ளிட்ட 111 பொருட்கள் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது. இவை அனைத்தும் இன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், வாக்கு மையங்கள் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News July 9, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு

image

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல், நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், 1355 பேர் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 276 வாக்குச்சாவடிகள், 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், 29 திருநங்கைகள் வாக்களிக்க உள்ளனர் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் செய்து வருகிறார். காவலர்கள் மற்றும் ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

News July 8, 2024

2 முறை இடைத்தேர்தலை சந்தித்த தொகுதி விக்கிரவாண்டி

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த ராதாமணி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல்நல கோளாறு காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்போது ஒரு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த புகழேந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தற்போது உயிரிழக்கவே மீண்டும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

News July 8, 2024

விக்கிரவாண்டி தொகுதி எப்போது உருவானது?

image

கடலூர் மற்றும் விழுப்புரம் ஒருங்கினைந்து தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோது விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி 1951ஆம் ஆண்டு உருவானது. பிறகு தொகுதி மறுசீரமைப்பு காரணமாக 1967 வளவனூர் தனி தொகுதியாக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டு வளவனூர் தொகுதி மறைந்து கண்டமங்கலம் தனி தொகுதியானது. பிறகு மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு காரணமாக 2011ஆம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியானது.

error: Content is protected !!