India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வந்த நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் உள்ள இத்தொகுதியில் மொத்தம் 1,95,495 வாக்குகள் பதிவானது. இதில், ஆண்கள் 95,536, பெண்கள் 99,944, மூன்றாம் பாலினத்தவர் 15 பேர் வாக்களித்துள்ளனர். இத்தொகுதியில் மொத்தம் 82.48% வாக்குகள் பதிவானது.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான வாக்குப்பதிவு 276 மையங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வந்த நிலையில் மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. இத்தொகுதியில் திமுக, பாமக, நாதக என 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்றைய தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள், புதுமுக வாக்காளர்கள் என பலரும் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 3 மணி நிலவரப்படி 64.44 வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 1 மணி நிலவரப்படி 51% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 1,20,762 நபர்கள் வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தது தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மதியம் 12 மணி நிலவரப்படி 46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் அசம்பாவிதம் ஏற்படாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி
கப்பியம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித். இவருக்கும் அதேப் பகுதியை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் இன்று காலை 6 மணிக்கு திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதியினர், தனது ஜனநாயக கடமையாற்றுவதற்காக திருமணம் முடிந்தவுடன் மாலையும் கழுத்துமாக மணக்கோலத்திலேயே கப்பியம்புலியூர் வாக்கு சாவடிக்கு வந்தனர். பின்னர் வாக்கு செலுத்த வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, இன்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக வந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், 11 மணி நிலவரப்படி 29.97% வாக்குகள் பதிவாகி உள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 4 மணி நேரத்தில் 71,044 பேர் இதுவரை வாக்களித்துள்ளதாக மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெண்ணை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டி.கொசப்பாளையம் வாக்குச்சாவடியில் கனிமொழி என்ற 49 வயது பெண் வாக்களிக்க வந்துள்ளார். அப்போது, அவரது முன்னாள் கணவர் ஏழுமலை, கனிமொழியை கத்தியால் குத்தியுள்ளார். தப்பியோட முயன்போது, வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 10 மணி நிலவரப்படி 25% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதாவது, 60,568 நபர்கள் தற்போது வரை வாக்களித்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுகவைச் சேர்ந்த வெளியூர் ஆட்கள் இன்னும் தொகுதிக்குள்ளேயே உள்ளதாக பாமக வேட்பாளர் சி.அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். பனையபுரம் வாக்குசாவடியில் வாக்கு செலுத்திய பின் பேசிய அவர், எனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக வந்த செய்தியை கேட்டு மன உளைச்சல் அடைந்தேன். 20 வாக்குச்சாவடிகளுக்கு சென்று வந்திருக்கிறேன். பாமகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.