Villupuram

News May 28, 2024

திமுக செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சிறப்புரை

image

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் தலைமையில் செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். ஆலோசனைக் கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News May 28, 2024

ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவர்கள்

image

விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான ரக்பி போட்டியில் பங்கேற்றனர். மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் நடைபெற்ற போட்டிகளில், இப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, வெற்றி பெற்றனர். சாதனை படைத்த மாணவர்கள் குழுவினர், விழுப்புரத்தில் ஆட்சியில் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பழனியை நேற்று (மே 27) சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

News May 28, 2024

விழுப்புரம்: லஞ்சம் வாங்கிய காவலர்கள் மாற்றம்

image

மொரட்டாண்டி டோல்கேட் அருகே காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் மற்றும் காவலர் அப்துல்ரஷீத் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை அடுத்து விழுப்புரம் எஸ்பி நேற்று (மே 27 ) இரண்டு காவலர்களையும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

News May 28, 2024

விழுப்புரம்: இன்று இங்கெல்லாம் மின்தடை

image

அரசூர் துணைமின் நிலையத்துக்குட்பட்ட இருந்தை கிராமத்தில் உள்ள மின்மாற்றியில் நடைபெறும் பராமரிப்பு பணியின் காரணமாக அரசூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், மாமண்டூர், பழைய பட்டினம், கிராமம், பொய்கை அரசூர், ஆணைவாரி ஆகிய கிராமப் பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் மின்சாரம் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News May 27, 2024

தி.வெ.நல்லூர்: அவசர செயற்குழு கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆனத்தூர் ஊராட்சியில் தி.வெ.நல்லூர் கிழக்கு ஒன்றிய அவசர செயற்குழு கூட்டம் இன்று ( மே 27) நடைபெற்றது. வருகிற ஜீன் 3-ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு இக்கூட்டம் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News May 27, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கோடை வறட்சியால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள குடிநீர் பணிகளை விரைந்து முடிப்பது குறித்த மாவட்ட அளவிலான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் உள்ளிட்ட பல அதிகாரிகள் உள்ளனர்.

News May 27, 2024

விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் CCTV மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை ஆட்சியர் பழனி இன்று நேரில் பார்வையிட்டு காவலர்களுக்கான வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தார்.

News May 27, 2024

விழுப்புரம்: ஏரி வயலை கொளுத்திய மர்ம நபர்கள்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஜக்கம்பட்டி கிராமத்தில் நேற்று (மே 26) ஏரி வயல் பயிர்களை மர்ம நபர்கள் எரித்து அட்டகாசம் செய்துள்ளனர். பொதுமக்கள் தகவல் அளித்ததின் பெயரில் திண்டிவனம் தீயணைப்புத் துறையினர் மிகுந்த சிரமத்திற்கு இடையே போராடி ஏரியில் தீப்பற்றி இருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து மயிலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News May 27, 2024

விழுப்புரம்: திருமண விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்

image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில், அரசு வழக்கறிஞர் கே.சி.ஆதித்தன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் நேற்று (மே 26) கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் மாவட்ட துணை செயலாளர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

News May 26, 2024

நாளை இப்பகுதியில் மின்தடை 

image

விழுப்புரம், கண்டமங்கலம் கோட்டத்தை சார்ந்த சொர்ணாவூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சொர்ப்பூர் பீடரில் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (27.8.24) நடக்கிறது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை ஆர்.ஆர்.பாளையம், சொரப்பூர், காட்டுக்குட்டை, வீராணம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!