Villupuram

News May 30, 2024

அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமைச்சர்கள்

image

செஞ்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களின் பிறந்தநாள் விழா நாளை (மே.31) கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று திமுகவின் மூத்த அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் சார் அவர்களுக்கு அமைச்சர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சால்வை அறிவித்தனர்.

News May 30, 2024

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைவிற்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்

image

வானூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையுற்றேன். பரமசிவம் அவர்கள் பல்வேறு பொறுப்புகளில் இருந்து கழகப் பணியையும் மக்கள் பணியையும் திறம்பட ஆற்றிய செயல்வீரர் ஆவார். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக முதல்வர் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

News May 30, 2024

கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த ஆட்சியர்

image

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் CCTV மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை ஆட்சியர் பழனி இன்று நேரில் பார்வையிட்டு காவலர்களுக்கான வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தார்.

News May 30, 2024

விழுப்புரம்: முன்னாள் எம்எல்ஏ காலமானார்

image

விழுப்புரம் மாவட்டம் அடுத்த கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்த வானூர் முன்னாள் எம்எல்ஏ எம்.பரமசிவம் நேற்று (மே 29) மாலை காலமானார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் மொ.ப.சங்கரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் இவரது இறுதி அஞ்சலியில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொள்வார் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

News May 30, 2024

விழுப்புரம் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசினர் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஆட்சியர் பழனி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் வருகைப் பதிவேடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு கேட்டறிந்தார். தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்க உத்தரவிட்டார்.

News May 29, 2024

விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தகவல்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை நடத்தப்பட்ட சாராய ரெய்டுகளில் 8290 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 8362 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களிடமிருந்து 12 நான்கு சக்கர வாகனங்களும்,3 மூன்று சக்கர வாகனங்களும், 46 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2232 லிட்டர் கள்ள சாராயமும் 79,727 புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

News May 29, 2024

விழுப்புரம் அருகே கொலை: ஒருவர் கைது

image

விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சகுந்தலா (60) என்ற மூதாட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரிடமிருந்து தங்க நகைகள் பறிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மூதாட்டியை கொலை செய்த வழக்கில் ஜெயந்த் என்பவரை போலீசார் நேற்று (மே 28) கைது செய்துள்ளனர்.

News May 29, 2024

ஏழு வயது சிறுமிக்கு தொல்லை முதியவர் கைது

image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே 7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிவராமன் (88) என்ற முதியோர் மீது திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று (மே 28) போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 28, 2024

கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த ஆட்சியர்

image

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் CCTV மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை ஆட்சியர் பழனி இன்று நேரில் பார்வையிட்டு காவலர்களுக்கான வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தார்.

News May 28, 2024

விழுப்புரம்: பாதாள சாக்கடை திட்டத்திற்கு எதிர்ப்பு

image

விழுப்புரம் மருதூர் சுடுகாட்டுப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் பம்ப் ஹவுஸ் அமைப்பதற்கான பணியினை நகராட்சி நிர்வாகம் செய்ய தொடங்கியது. அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும் என கூறி ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது. நாளை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!