Villupuram

News June 4, 2024

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி,இன்று (04.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் இங்கு சுமுகமாக வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

News June 4, 2024

விழுப்புரத்தில் விசிக முன்னிலை

image

விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் வாக்குகள் எனப்படுகின்றன. வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் அந்தந்த தொகுதி வாரியாக ஒரே அறையில் வைத்து எண்ணும் பணி துவங்கியுள்ளது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் தற்போது விசிச வேட்பாளர் ரவிகுமார் முன்னணியில் உள்ளார்.

News June 4, 2024

அரசியல் கட்சி பிரதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளிலிருந்து 13 விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் வாக்கு எண்ணிக்கை பொதுபார்வையாளர் அகிலேஷ் குமார் மிஷ்ரா அவர்கள் மேற்பார்வையில் தொடைங்கியது.

News June 4, 2024

விழுப்புரம்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 4, 2024

விழுப்புரத்தில் தபால் வாக்கு எடுத்துச் செல்லும் பணி 

image

விழுப்புரம் நாடாளுமன்ற தனி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி அளவில் தொடங்கிவுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குகள் அடங்கிய ஸ்ட்ராங் ரூம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையிலான அதிகாரிகள், இன்று (ஜூன் 04) முகவர்கள் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு பெட்டிகள் ஏற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

News June 4, 2024

விழுப்புரத்தின் மகுடம் யாருக்கு?

image

2024 மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் மொத்தம் 76.47% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக திமுக சார்பில் ரவிக்குமாரும் (விசிக), அதிமுக சார்பில் பாக்யராஜும், பாஜக சார்பில் முரளிசங்கரும் (பாமக) போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News-உடன் இணைந்திருங்கள்.

News June 3, 2024

விசிகவில் இணைந்த முன்னாள் என்எல்சி மேலாளர்

image

விழுப்புரத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பிஐ அவரது இல்லத்தில் சந்தித்து இன்று (ஜூன் 3) நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் முதன்மைப் பொது மேலாளராகப் பணிபுரிந்து பணிநிறைவு செய்து ஏ.ஜி.பி.ஆசைத்தம்பி என்பவர் தன்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

News June 3, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் பணிக்காக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்கு எண்ணும் பகுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது உள்ளார்.

News June 3, 2024

விழுப்புரம்: மழையால் வீடுகள் சேதம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது. சூரைக்காற்று வீசியதால் பல இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் அருகே உள்ள காணை குப்பம் கிராமத்தில் மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக வீடுகளில் போடப்பட்டிருந்த சிமெண்ட் சீட்டுகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கடும் சேதத்தைச் சந்தித்தன.

News June 3, 2024

விழுப்புரம்: புகையிலை பொருட்கள் பறிமுதல்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பிரம்மதேசம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பிரம்மதேசம் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் முகமது ஷாகுல் அமீது என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!