India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம்-புதுச்சேரி நான்கு வழிச்சாலை காவணிப்பாக்கம் மேம்பாலத்தில் கார் மற்றும் ஆம்னி கார் இன்று ஒரே சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 வாகனத்தில் வந்தவர்கள் படுகாயமடைந்தனர். இதில் ஒரு பெண்மணிக்கு கால் உடைந்தது. அப்பகுதியில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ்கு தகவல் கொடுத்து, காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வானூர் வட்டத்தில் சிறப்புத் திட்டமான “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், திருவக்கரை கல்மரப் பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம் உட்பட பலர் உள்ளனர்.
விழுப்புரம் காவல் சரகத்திற்குட்பட்ட கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கோட்டகுப்பம், விழுப்புரம், சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்பட 33 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆய்வாளர் அம்பேத்கர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து விழுப்புரம் டிஐஜி திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள கோனேரி குப்பம் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது 86ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நட்டார். இந்நிகழ்வில், பாமக கௌரவ தலைவர் மணி, மயிலம் சட்டமன்றம் உறுப்பினர் சிவகுமார் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில், “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், பொம்மையார்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி இன்று நேரில் பார்வையிட்டதுடன், உணவினை உண்டு தரம் குறித்து ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் இருந்தார்.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வரும் 98 பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக தமிழ்நாடு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஷ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரம் பார்சல் சாப்பாட்டுக்கு ஊறுகாய் தராத உணவகத்திற்கு, ஊறுகாய் விலையுடன் சேர்ந்த மொத்தமாக ரூ.35,025 அபராதம் வித்தது நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2022ல் ஆரோக்கியசாமி என்பவர் 25 சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார். பார்சலில், ஊறுகாய் இல்லாததால் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், மனஉளைச்சலுக்கு ரூ.30,000, வழக்கு செலவு ரூ.5000, ஊறுகாய் ரூ.25 என ரூ.35,025 வழங்க உத்தரவிடப்பட்டது.
வானூர் வட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டமான ‘உங்களைத்தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் தென்கொடிப்பாக்கம் ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், தென்கொடிப்பாக்கம் – கொந்தாமூர் இடையே நரசிம்மா நதியின் குறுக்கே உயர்மட்டப்பாலம் கட்டப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி நேரில் ஆய்வு செய்தார்.
வன்னியர்களின் எதிர்காலம் விளையாட்டா என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டுக்கு பரிந்துரைக்க மேலும் ஓராண்டா எனக் கேட்டுள்ள ராமதாஸ், வன்னியர்களுக்கான சமூகநீதியை பெற்றுத்தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை 25ஆம் தேதி நாளை நடைபெறுகிறது. பி.காம் உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புக்கான சேர்க்கை நாளை காலை 10 மணிக்கு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மீதமுள்ள துறைகளிலும் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.