India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் கண்டாச்சிபுரம் அடுத்த காரணை ஊராட்சியைச் சேர்ந்தவர் அருணகிரி (42). விவசாயியான இவர், 4 கறவை மாடுகளை வளர்த்து வந்தார். வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் கட்டப்பட்டிருந்த 4 சினை மாடுகளும் இறந்து கிடந்தன. தகவலறிந்த வி.ஏ.ஓ., அன்புவிழி மற்றும் ஆயந்துார் கால்நடை மருத்துவர் ரவி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இறந்த மாடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், டி.கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி, 35. இவரது மகள் காயத்ரி(10). நேற்று இவர், தனது தாயுடன் அப்பகுதி வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். சங்கர் என்பவர் ஓடையில் இருந்த பாறைகளை ஜெலட்டின் குச்சியை வெடிக்க வைத்து தகர்த்தார். அப்போது, சிறுமியின் தலையில் கல் விழுந்து, தாய் கண்ணெதிரே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு காரணமான நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வளத்தி அடுத்த சண்டிசாட்சி தோட்டிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் தீபிகா அண்ணமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நீலாம்பூண்டியில் செஞ்சி சேத்பட் சாலையில் நேற்று காலை கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் தீபிகாவின் பின்னால் மோதியதில் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பாங்கொளத்தூரில் விவசாயியின் 5 ஆடுகளை காரில் கடத்த முயன்ற கும்பலை பொதுமக்கள் மடக்கினர். போலீசார் விசாரணையில் 5 பேர் கைது செய்யப்பட்டு, 7 ஆடுகள், 2 சொகுசு கார்கள், ₹60,000 பணம், தங்க மோதிரங்கள், ₹2.13 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், குற்றவாளிகள் பல்வேறு மாவட்டங்களில் திருட்டில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. அதில், ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது. ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் ஐஜேகே பிரமுகரை கொலை செய்ய முயன்றதாக, பிரபல ரவுடி கலையரசன் கைது செய்யப்பட்டார். சுவர் விளம்பரம் எழுதுவதில் ஐஜேகே நிர்வாகி ஆண்டனி ராஜ் என்பவருக்கும் கலையரசனுக்கும் பகை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஆண்டனியை கத்தியால் கொலை செய்ய முற்பட்டபோது, விழுப்புரம் நகர போலீசார் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கலையரசன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னை ஓட்டேரி பேங்க் தெருவைச் சோ்ந்தவர் ராமதிலகம் (54). இவர் திருவண்ணாமலை உள்ளிட்ட கோயில்களில் தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் மாமந்தூா் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற போது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (21.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் மேற்கு ஒன்றியம் இளமங்கலம் ஊராட்சியில் இன்று பூத் எண்.72 அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணி, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு அதிமுக விழுப்புரம் மாவட்ட தொழில் தகவல் நுட்ப பிரிவு நிர்வாகிகள் தலைமை தாங்கினர். இக்கூட்டத்தில் அதிமுக கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.