India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1914ல் செஞ்சியை பிரெஞ்சுகாரர்கள் ஆட்சி செய்து வந்த போது, திண்டிவனம் சாலையில் உள்ள பங்களாவில் குடியிந்த பிரெஞ்சுகாரர்கள் தங்கள் வளர்ப்பு நாய் இறந்துவிட, அங்கேயே புதைத்து கல்லறை அமைத்து அதில் “பிராந்தா ஏ டியர் டாக் நவம்பர் 26 1914” என எழுதி வைத்துள்ளனர். நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாய்க்கு கட்டப்பட்ட கல்லறை இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க..
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)மூலம் மேனேஜர், நிறுவன செயலாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் <
திருவம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழாண்டு அதிகளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.பழங்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில்,ரசாயனம் கலப்படம் தொடர்பான வதந்தியால் தர்பூசணியை கொள்முதல் செய்ய யாரும் முன்வராத நிலை உருவாகி உள்ளது. அதனால் நிலத்தில் அழுகிய நிலையில் உள்ள தர்பூசணிகளை அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முட்டத்தூர் தனியார் நிறுவன ஊழியர் குமார் தனது பல்சர் பைக்கில் வந்தார். பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்று திரும்பிய சில நிமிடங்களில் பைக் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் அரங்கேறிய இந்த திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (07.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
‘ராஜா தேசிங்கு’ என்ற வார்த்தையை சினிமா மூலம் கேள்வி பட்டிருப்பீர்கள்.பலரும் அறிந்த புகழுக்குரிய ராஜா தேசிங்கு செஞ்சியை ஆண்ட மன்னர். மாவீரரான இவர் ஆற்காடு நவாப் உடனான போரில் மரணம் அடைய இவரது மனைவி ராணி பாய் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தார்.இந்த ராணி பாயின் நினைவாக உருவானது தான் “ராணிப்பேட்டை'”. நீங்காத புகழ் கொண்ட இவர்கள் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. <
திண்டிவனம் வட்டம் ஆசூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ், அதே பகுதியை சேர்ந்த பெண்ணை வடபழநி கோவிலில் இரு நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்தார். இதனை அறிந்த பெண் வீட்டார் இவர்களை சமாதானம் பேச வரவழைத்தனர். இவர்கள் நேற்று(ஏப்.06) மாலை காரில் தீவனூர் வந்தபோது பெண் வீட்டார் நாகராஜை தாக்கி விட்டு, பெண்ணை கடத்தி சென்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நாகராஜ் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குமளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் குரு (36). குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த இவருக்கு கிட்னி பாதிப்பு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இவர் தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வளவனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள்<
Sorry, no posts matched your criteria.