India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மக்களே, உங்கள் செல்போன் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடுபோனாலோ இனி கவலை வேண்டாம். மத்திய அரசின் சஞ்சார் சாத்தி என்ற <
விழுப்புரம் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு துறையில் பட்டம், 3 ஆண்டு அனுபவம் அவசியம். மாத ஊதியம் ரூ.20,000. விண்ணப்பங்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அல்லது இணையதளத்தில் கிடைக்கும். கடைசி தேதி 22.9.2025 மாலை 5.45 மணி. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொண்டாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மக்களே, உங்கள் செல்போன் தொலைந்துவிட்டாலோ, திருடுபோனாலோ இனி கவலை வேண்டாம். மத்திய அரசின் சஞ்சார் சாத்தி என்ற <
விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனையில் புதிய மருத்துவப் பிரிவுகளுக்கான கூடுதல் கட்டடங்கள் கட்ட தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமணன் சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று சிறப்பு நிதியில் ரூ.3.50 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடங்கள் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. நேற்று விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் துறைசார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம், நாளை (செப்.7) மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
▶️ மருத்துவ பணியாளர்:
வயது: 19 – 30(இருபாலர்)
கல்வித்தகுதி: பி.எஸ்.சி. நர்சிங், லைஃப் சயின்ஸ்
மாத சம்பளம்: ரூ.21,320
▶️ ஓட்டுநர்:
வயது: 24 -34(ஆண்கள்)
கல்வித்தகுதி: 10-வது தேர்ச்சி
ஓட்டுநர் உரிமம்: இலகு ரகம், பேட்ச்
மாத சம்பளம்: ரூ.21,120
SHARE பண்ணுங்க
விழுப்புரம் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே <
செஞ்சி அடுத்த தாண்டவசமுத்திரம் துணை மின் நிலையத்தின் சார்பில் பராமரிப்பு காரணமாக இன்று 06/09/2025 சனிக்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் தடை காரணமாக தாண்டவசமுத்திரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான ஒதியத்தூர், சின்ன பொன்னாம்பூண்டி,தின்னலூர், சென்னாலூர், நாகம் பூண்டி ஆகிய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுவதாக துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில், “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம், இன்று (செப்.6) நடைபெற உள்ளது. மரக்காணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இந்த முகாமில், 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு சிகிச்சை அளிக்க உள்ளனர். பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, மருத்துவக் குழுக்களிடம் பரிசோதனை செய்துகொண்டு, முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேசிய அளவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை NIRF வெளியிட்டுள்ளது. இதில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, 154-வது இடத்தைப் பிடித்துத் தமிழகத்திற்கும், குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. மேலும், வேலூர் மண்டலத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் இக்கல்லூரி முதலிடம் வகிக்கிறது.
Sorry, no posts matched your criteria.