Vellore

News November 3, 2024

காட்பாடி ரயில் நிலையத்தில் டிஐஜி ஆய்வு

image

காட்பாடி ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை டிஐஜி இப்ராஹிம் ஷெரிப் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு 7 ஆயிரம் சிறப்பு ரயில்களை இயக்கி உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையினருடன் ரயில்வே போலீசார் மற்றும் வெளிமாநில போலீசாரும் இணைந்து செயல்பட்டு வருவதால் கஞ்சா கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் எனகூறினார்.

News November 3, 2024

 132 குழந்தைகள் ஆம்புலன்சில் பிறந்துள்ளன

image

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு 110க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் பிரசவத்துக்கு பயன்படுத்தும் போது எதிர்பாராத விதமாக ஆம்புலன்சிலேயே குழந்தைகள் பிறக்கும் நிலை ஏற்படுகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரை 132 குழந்தைகள் பிறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 2, 2024

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவம்பர் 02) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. இதில் 2 பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்

News November 2, 2024

வேலூர் மாவட்டத்தில் 6 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (நவம்பர் 2) நடத்திய சோதனையில் 60 மது பாட்டில்கள், 5 லிட்டர் கள், 4.5 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 6 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

News November 2, 2024

மழைக்காலத்தில் இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்

image

வெளியில் செல்வோர் கட்டாயம் குடை ரெயின்கோட், ஜர்கின் போன்றவற்றை கொண்டு செல்லுங்கள். மெழுகுவர்த்தி, டார்ச் போன்றவற்றை வாங்கி வைக்கவும். வயதானவர்கள், உடல்நலம் பாதிப்பு அடைந்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மருந்துகளை வாங்கி வைக்கவும். மழை பெய்யும்போது, ஜன்னல் கதவுளை மூடி வையுங்கள். மின் பழுது பார்க்க வேண்டாம். ஈரமான கைகளுடன் ஸ்விட்ச் போடாதீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கவும்.

News November 2, 2024

வேலூர் மாநகராட்சியில் 20 டன் பட்டாசு குப்பைகள் அகற்றும்

image

வேலூர் மாநகராட்சியில் வழக்கமான நாட்களில் ஒரு நாளைக்கு சுமார் 210 டன் குப்பைகள் சேரும். தீபாவளி பண்டிகை முன்னிட்டு பலர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். இதனால் சாலைகள், தெருக்களில் பட்டாசு குப்பைகள் குவிந்து கிடந்தன. குப்பைகள் அகற்றும் பணியில் 900 பணியாளர்கள் ஈடுபட்டனர். நேற்று கூடுதலாக ஒரேநாளில் 20 டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. அதாவது 230 டன் குப்பைகளை அகற்றி உள்ளனர்.

News November 2, 2024

வேலூரில் சென்டர் மீடியனில் கார் மோதி கார் விபத்து

image

ஆம்பூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விதத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் காரில் இருந்த 3 பேரை மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் காரை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 2, 2024

வேலூர் மாவட்டத்தில் 15 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுகிறது. இதுதொடர்பாக வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் 9 வழக்குகளும், சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், வேப்பங்குப்பம், வேலூரில் தலா ஒரு வழக்கு என மாவட்டம் முழுவதும் 15 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என நேற்று போலீசார் தெரிவித்தனர். 

News November 2, 2024

குடியாத்தம் 3 குழந்தைகளின் தாய் தற்கொலை

image

குடியாத்தம் தட்டாங்குட்டை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். பவித்ரா தீபாவளிக்கு புது சேலை வாங்கி தரக்கோரி குமரேசனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தீபாவளி கழித்து வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனால் மன வருத்தத்தில் இருந்த பவித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 2, 2024

வேலூர் மாவட்டத்தில் 30 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (நவம்பர் 1) நடத்திய சோதனையில் 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஒருவர்  மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற தொடர் குற்ற செயல்கள் ஈடுபட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!