India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவகுமாரை தாக்கிய விவகாரத்தில் ஏற்கனவே டி ஐ ஜி, சிறை கண்காணிப்பாளர், ஜெயிலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் 11 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி இன்று (நவம்பர் 6) உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் 73 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க வகையில் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு மூலப்பொருளான வெல்லம் கிடைப்பதை தடுக்கும் வகையில் வெல்லம் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் வெல்லத்தை விற்கும் போது கவனமாக விற்பனை செய்ய வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வரும் நவம்பர் 8-ம் தேதி காலை 10.30 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.ஷேர் பண்ணுங்க.
அன்வர்திகான்பேட்டை அருகே நேற்று 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பத்மராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாய்நாதபுரத்தை சேர்ந்தவர் தாட்சாயினி அல்லாபுரத்தில் உள்ள தேசிய வங்கியில் கடன் வாங்கினார். கடனை அடைத்தும் தடையில்லா சான்றிதழ் வழங்காததால் வேலூர் நுகர்வோர் கோட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் நேற்று நீதிபதி மீனாட்சி சுந்தரம் அதிரடி தீர்ப்பு வழங்கினர். அதில் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.25 ஆயிரம் என அபராதம் விதித்து அதிரடி உத்தரவிட்டார்.
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட் டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க சோதனை செய்யப்பட்டது. அதன்படி 3ம் தேதிவரை 3 நாட்கள் வேலூர் சரகத்தில் சோதனையில் போக்குவரத்து விதிமீறிய 101 ஆம்னி பஸ்களுக்கு ரூ.7,18,750 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்றுடன் சோதனை நிறைவடைந்தது. இதில் கூடுதலாக 25 பஸ்களுக்கு ரூ.97,500 அபராதம் விதிக்கப்பட்டதாக வட்டார போக்குவரத்துத் அதிகாரிகள் தெரிவித்தனர்
வேலூர் அரியூரை சேர்ந்தவர் பிரகாஷ் (43). முன்னாள் ராணுவ வீரரான இவர் அக்.31ஆம் தேதி குடும்பத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாட தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த ஒன்றரை சவரன் நகை, ரூ.40,000 திருடு போயுள்ளது. இதுகுறித்து அரியூர் போலீசில் பிரகாஷ் நேற்று புகாரளித்தார்.
வேலூரில் தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் முதியோர் இல்லங்கள், மகளிர் விடுதிகள், குழந்தைகளுக்கான இல்லங்கள் ஆகியவை சமூக நல அலுவலகத்தின் கீழ் பதிவு செய்திட வேண்டும். முதியோர் இல்லத்திற்கு ww.seniorcitizenhomes, tnsocialwelfare.tn.gov.in என்ற இணையதளத்திலும், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகளை https://tnswp.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கோவைக்கு நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி, வேலூர் மாவட்டத்தில் இருந்து பாதுகாப்பு பணிக்காக 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 70 போலீசார் கோவை மாவட்டத்திற்கு இன்று காலை (நவம்பர் 4) புறப்பட்டு சென்றனர். அவர்கள் அங்கு 2 நாட்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.