Vellore

News December 31, 2024

 புதுமைப்பெண் திட்டத்தால் 12,872 பேர் பயன்

image

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் நேற்று புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் 11,966 மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயனடைந்து வருகின்றனர். தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 909 மாணவிகள் பயனடைய உள்ளனர் என்றார்.

News December 31, 2024

குடியாத்தம் காவல் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு

image

குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் எஸ்.பி.மதிவாணன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பாலியல் தொல்லை மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் வந்தால் உடனடியாக உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். பாலியல் புகார் தொடர்பாக மெத்தனமாக செயல்படும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News December 31, 2024

புத்தாண்டின் போது பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை

image

வேலூர் மாவட்டத்தில் 31ஆம் தேதி இரவு பொதுமக்கள் ஆங்கில புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் வாகன போட்டிகளில் ஈடுபடுவது, ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்குவது  போன்ற செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

News December 30, 2024

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (டிச. 29) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News December 29, 2024

வேலூர் மாவட்டத்தில் வரும் 4-ம் தேதி மிதிவண்டி போட்டிகள்

image

முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் வருகிற ஜனவரி 4-ம் தேதி மிதிவண்டி போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை அசல் மற்றும் நகலுடன் மாவட்ட விளையாட்டு அலுவலத்திற்கு நேரடியாகவோ அல்லது 74017 03483 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ வரும் 3-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News December 28, 2024

சிறுத்தை நடமாட்டம்; விழிப்புணர்வு ஏற்படுத்த குழு அமைப்பு

image

சிறுத்தை நடமாட்டம் உள்ள குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் வனத்துறை, காவல்துறை, வருவாய் துறை இணைந்து 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 20 மலை கிராமங்களில் மக்களுக்கு இன்று (டிசம்பர் 28) முதல் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். அதேசமயம் சிறுத்தையை பிடிக்க கேமரா, டிராப் கேமரா வைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News December 27, 2024

விவசாயிகளுக்கு வேலூர் கலெக்டர் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கைப்பேசியில் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்துதல் அமைப்புகள் 135 எண்கள் மானியத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு பாகாயம் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் எதிரில் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News December 27, 2024

கனியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி

image

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த மேல்வல்லம் பகுதியில் புதியதாக கட்டி வரும் வீட்டின் மேல் பகுதியில் சில்வர் கைப்பிடி பொறுத்தும் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் வேலூர் காகிதப்பட்டறை பகுதியை சேர்ந்த முகேஷ் (26), சதீஷ் (24) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 27, 2024

கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (டிசம்பர் 27) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வன அலுவலர் குருசுவாமி தபாலா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுண ஐயப்பதுரை, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

News December 27, 2024

வேலூர் மாவட்ட காஜி பணியிடத்திற்கு விண்ணப்பம்

image

வேலூர் மாவட்டத்தில் மாவட்ட காஜி பணியிடத்திற்கு இஸ்லாமியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் விண்ணப்பிக்க தகுதியுடைய இஸ்லாமிய நபர்கள் வேலூர் கலெக்டர் என முகவரியில் வரும் 10ஆம் தேதிக்குள் பதிவு அஞ்சலில் அல்லது வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏ-பிளாக், முதல் மாடியில் அமைந்துள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அளிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!