Vellore

News January 22, 2025

வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜனவரி 22) நடத்திய சோதனையில் 9 மது பாட்டில்கள், 2.200 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் இன்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News January 22, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜனவரி 22.01.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்றுமுன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News January 22, 2025

அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் இன்று (22.01.2025) அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் திருகுணஐயப்பதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News January 22, 2025

செட்டிகுப்பம் ஏரி கால்வாய் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

image

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (22.01.2025) “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் குடியாத்தம் வட்டத்திற்குட்பட்ட செட்டிகுப்பம் ஏரிகால்வாய்க்கு விவசாயிகளின் கோரிக்கையான மோர்தானா வலதுபுற கால்வாயில் இருந்து மதகு அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது குடியாத்தம் ஒன்றியக்குழுத்தலைவர் சத்யானந்தம், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கோபி மற்றும் பலர் இருந்தனர்.

News January 22, 2025

காட்பாடியில் நாளை மின்தடை 

image

வேலூர் மாவட்டத்தில், நாளை (ஜன.23) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

News January 21, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜனவரி 21.01.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்றுமுன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News January 21, 2025

கிணற்றில் மிதந்த பச்சிளம் குழந்தை மீட்பு

image

பள்ளிகொண்டா அடுத்த ஒதியத்தூர் ராஜபுரம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் இன்று (ஜனவரி 21) பச்சிளம் ஆண் குழந்தை சடலம் மிதந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் மிதந்த ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

News January 21, 2025

விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள்

image

பேர்ணாம்பட்டு அரவட்லா கிராமத்தில் இன்று (ஜனவரி 21) அதிகாலை பட்டாபி என்பவரின் விவசாய நிலத்தில் புகுந்த 2 காட்டு யானைகள் அங்குள்ள தென்னை மரக்கிளைகளை உடைத்து சேதப்படுத்தியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் பேர்ணாம்பட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்து வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன், பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

News January 21, 2025

வேலூர் மாவட்ட நிர்வாகம் தகவல்

image

உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 3வது புதன்கிழமை தாலுகா அளவில் கலெக்டர் தங்கி கள ஆய்வில் ஈடுபட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி வரும் ஜனவரி 22-ம் தேதி குடியாத்தம் வட்டத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 21, 2025

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாளை அறிவியல் கண்காட்சி

image

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சியை நாளை (ஜனவரி 21) காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார். இதில் துணை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!