India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழா காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளியில் நேற்று (ஜன.31) நடந்தது. இதில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காட்பாடி சன்பீம் மெட்ரிக்பள்ளியில் நேற்று (ஜனவரி 31) நடந்த நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, காட்பாடி டிஎஸ்பி பழனி, வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலூர் மேற்கு மாவட்டம் வேலூர் தொகுதி, அணைக்கட்டு தொகுதி. குடியாத்தம் (தனி) தொகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் வேலூர் மாவட்டக் கழகச் செயலாளராக வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மாவட்டக் கழக இணைச் செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பிரசாந்த், துணைச் செயலாளர் தமிழ்செல்வன், துணைச் செயலாளர் அருணா மேலும் செயற்குழு உறுப்பினர்கள் என 10 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தட்டப்பாறை கிராமம் ஏரியின்கீழ்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தரணி என்பவரின் 3வயது மகள் ஜெயப்பிரியா நேற்று முன்தினம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின்பேரில், காணாமல் போன குழந்தையை, டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று சிறுமி, வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மது பாட்டில்களை விற்பனை செய்த கோபால் (32), மோகன் (60), ராஜேஷ் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். <
வேலூர் மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டு ராபி பருவத்தில், பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெல் பயிர்களுக்கு இன்று (ஜன. 31) விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.517 தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இ-சேவை மையங்களில் பதிவு செய்யலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க.
வேலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் அவசர செயற்குழு கூட்டம் இன்று தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி தலைமை தாங்கினார். இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், அமுலு விஜயன் கலந்து கொண்டனர். மேலும், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடந்த 2022இல் வேலூரில் ஆண் நண்பரோடு பயணித்த மருத்துவர் கடத்தி கூட்டு பாலியல் செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கைதான பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ் ஆகிய நால்வருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி 3.2.2025 அன்று டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி அரசு இயந்திர கலப்பை பணிமனை தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் நடைபெற உள்ளது. எனவே இந்த அறிய வாய்ப்பை மாவட்ட விவாசியிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளபடுகிறது.
Sorry, no posts matched your criteria.