Vellore

News July 6, 2025

வேலூர் உதவித்தொகை பெற விண்ணப்பம் கலெக்டர் தகவல்

image

வேலூரில் கடந்த 2020 ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜூன் 30 தேதி வரையிலான காலாண்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ளவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் அல்லது<> இந்த <<>>இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News July 6, 2025

வேலூரில் 6 மாதத்தில் ரூ.8 கோடி பணம் மோசடி

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 8 கோடியே 50 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 1,335 புகார்கள் வந்துள்ளது. மோசடி நபர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கை முடக்கம் செய்து, 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரம் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கு வரவு வைப்பதற்கான பணி நடந்து வருகிறது. சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாக 6 பேரை கைது செய்துள்ளோம். என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

News July 6, 2025

கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் விவரம்

image

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க

News July 6, 2025

உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

image

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு வேலூர் ஆட்சியர் அலுவலகத்தை (0416-2252345, 0416-2220042) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16961996>>தொடர்ச்சி<<>>

News July 6, 2025

வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் உருக்கமாக இரங்கல்

image

கே.எச்.குழுமத் தலைவரும், தென்னிந்திய தோல் பதனிடுவோர் மற்றும் முகவர்கள் பேரவையின் ஆதரவாளர் ஜனாப் ஹாஜி மலாக் முகமது ஹாஷிம் சாஹிப் காலமானார். அவரது மறைவு செய்தியறிந்த வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். “சொல்லொணா துயருற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

News July 6, 2025

வேலூர் மாவட்ட கலெக்டரின் அறிவிப்பு

image

வேலூரில் இயங்கிவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கு மாவட்ட எல்லைக்குட்பட்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது. விண்ணப்பங்களை வரும் 21-ம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, வேலூர்-01 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News July 6, 2025

வேலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பாதுகாப்பு நடவடிக்கை

image

வேலூர் மாவட்ட காவல்துறையால் 5 ஜூலை , 2025 அன்று இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

News July 5, 2025

குழந்தை வரம் கொடுக்கும் மார்க்கபந்தீஸ்வரர்

image

வேலூரில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில், பாலாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது விருஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில். சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு பழமையான சிவன் கோயிலாகும். இங்குள்ள சிம்ம தீர்த்தத்தில் நீராடி, குழந்தை வரம் வேண்டி வரும் பெண்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணம் ஆகாதவர்கள் மார்க்கபந்தீஸ்வரரையும், மரகதாம்பிகையையும் வணங்கி நலம் பெறலாம். ஷேர்

News July 5, 2025

பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டல் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & வேலூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (0416-2221325) அழைக்கலாம். அனைவருக்கும் பகிரவும்

News July 5, 2025

தொழிலாளர்களுக்கு ரூ.3,000 பென்ஷன் (1/2)

image

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்திய அரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். <>இந்த லிங்க்<<>> மூலம் அப்ளை செய்து இ-ஷ்ரம் கார்டு பெறலாம். விபரங்களுக்கு HELP DESK 18008896811 மற்றும் மாவட்ட தொழிலாளர் நலத்துறையை தொடர்பு கொள்ளலாம். தினக்கூலி தொழிலாளர்களுக்கு அருமையான திட்டம். ஷேர் பண்ணுங்க. <<16949783>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!