Vellore

News April 4, 2024

வேலூர்: தமிழக, ஆந்திர போலீசார் ஆலோசனை

image

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் இன்று ( ஏப்ரல் 4) ஆந்திரா, தமிழக போலீசார் இணைந்து தேர்தலின் போது எவ்வித அசம்பாவிதமும் நடைப்பெறாமல் இருக்க மாநில எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்துதல், பணம் பரிமாற்றம் மற்றும் பரிசு பொருட்கள், கடத்துவதை தடுப்பது பற்றி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

வேலூர்: பைக் மீது கார் மோதி தொழிலாளி பலி

image

வேலூர் சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஷல்லிகுமார் (48), தொழிலாளி. இவர் கடந்த 27ஆம் தேதி தனது பைக்கில் சேண்பாக்கம் மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஷல்லிகுமாரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல் 3) இறந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 4, 2024

வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

image

கணியம்பாடியை அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில், தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று ( ஏப்ரல் 3) நடந்தது. இதில் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டு, ஊர்வலமாக சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News April 3, 2024

பிரதமர் மோடி வேலூர் வருகை

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருக்கிறார். ஏப்ரல் 9ஆம் தேதி மாலை 4 மணியளவில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் (ரோட் ஷோ) செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News April 3, 2024

கோட்டை கோயில் விநாயகருக்கு சிறப்பு பூஜை

image

வேலூர் மாவட்டம், பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இன்று ஸ்ரீ விநாயகர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் விநாயகர் சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

News April 3, 2024

வேலூர் தொகுதியில் அன்புமணி நாளை பிரச்சாரம்

image

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நாளை (ஏப்ரல் 4) அணைக்கட்டு, கே.வி.குப்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பாமக தலைவர் அன்புமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். இந்த நிகழ்ச்சியில் புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

News April 3, 2024

தேர்தல் அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி முகாம்

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில்  6,272 அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. வேலூரில் டிகேஎம் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 5 இடங்களில் நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான  சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

தொழிற்சாலை உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு

image

வேலூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (மார்ச் 2) ஆம்பூர் தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரபீக் அகமது, ஆம்பூர் ஜமாத் தலைவர் அஷ்வக்அகமது ஆகியோர் சந்தித்து திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News April 3, 2024

வேலூர் கோட்டையில் முதல்வர் பிரச்சார பொதுக்கூட்டம்

image

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 2) நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!