Vellore

News April 9, 2024

மோடி வருகை: வேலூரில் போக்குவரத்து மாற்றம்

image

வேலூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 10) வருகை தர உள்ளார். அன்றைய தினம் பாதுகாப்பு பணியையொட்டி வாகன நெரிசலைத் தவிர்க்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்பேரில் வேலூர் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளைய தினம் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை அமலில் இருக்கும்.

News April 9, 2024

விவசாய நிலத்திற்குள் நுழைய முயன்ற காட்டு யானைகள்

image

குடியாத்தம் அடுத்த அனுப்பு கிராமத்தில் 5 காட்டு யானைகள் கூட்டமாக விவசாய நிலத்திற்குள் நுழைய முயன்றது. இதையடுத்து அப்பகுதி மக்கள் குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை மீண்டும் காட்டு பகுதிக்கு விரட்டியடித்தனர்.

News April 9, 2024

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

image

வேலூர் மோட்டூரை சேர்ந்தவர் சுஜாதா (19). இவர் கிரீன் சர்க்கிள் அருகே ஓட்டலில் வேலை செய்துவந்தார். இவரும் அதே ஓட்டலில் வேலை செய்துவந்த சத்துவாச்சாரியை சேர்ந்த இளங்கோவன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் நேற்று (ஏப்ரல் 8) ஆற்காடு சாலையில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு வேலூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

News April 9, 2024

வேலூர்: 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை

image

வேலூர் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு நாளை (ஏப்ரல் 10) பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருக்கிறார். இதனால் வேலூர் மாநகராட்சி பகுதிகள் முழுவதையும் இன்றும், நாளையும் (ஏப்.9, 10) “ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்” பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக (No Flying Zone) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

News April 9, 2024

திமுக வேட்பாளரை ஆதரித்து ஆர்.எஸ்.பாரதி பிரச்சாரம்

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட தேரடி பகுதியில் வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைமை கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், குடியாத்தம் எம்எல்ஏ அமலு, நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 8, 2024

திமுக வேட்பாளரின் மனைவி வாக்கு சேகரிப்பு

image

வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து இன்று (ஏப்ரல் 8)  வேட்பாளரின் மனைவி சங்கீதா கதிர் ஆனந்த் வேலூர் விரிஞ்சிபுரம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

News April 8, 2024

பிரதமர் மோடி வருகை பந்தல் அமைக்கும் பணி ஆய்வு

image

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வேலூர் கோட்டை மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 10ம் தேதி வருகிறார். இதையொட்டி கோட்டை மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணியை இன்று (ஏப்ரல் 8) வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், பாஜக மாவட்ட தலைவர் மனோகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News April 8, 2024

வேலூர்: வீட்டில் இருந்து 7 லட்சம் பறிமுதல்

image

காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் நடராஜன் வீட்டில் தேர்தலுக்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு நேற்றிரவு (ஏப்ரல் 7) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் சந்தோஷ் தலைமையிலான பறக்கும் படையினர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த 7 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

News April 8, 2024

வேலூர் தபால் வாக்குகள் பெறும் பணிகள் தீவிரம்

image

பாராளுமன்ற பொது தேர்தல் முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் தபால் வாக்குகளை அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று பெறும் பணி இன்று (ஏப்ரல் 8) நடந்தது. வேலூர் தொரப்பாடி பகுதியில் தபால் வாக்குகளை முதியவர்கள் செலுத்தினர். இந்த பணியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா பார்வையிட்டார்.

News April 8, 2024

மோடி வேலூர் வருகை: போலீசார் தீவிர சோதனை

image

மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் நாளை மறுநாள் (ஏப்.10) நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார். இதையொட்டி கோட்டை மைதானத்தில் இன்று (ஏப்ரல் 8) வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!