India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 21) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 186 மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்து ஒரே நாளில் 21 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
வேலுார் விருபாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி (72). இவர் கடந்த 10ம் தேதி சமையல் செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பற்றியது இதில் காயமடைந்த ருக்மணியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ருக்மணி நேற்றிரவு (ஏப்ரல் 20) இறந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தியாவில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்களை மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் தனியார் அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் மாநிலங்களில் கல்வி உலகம் (எஜூகேசன் வேல்டு) என்ற அமைப்பு 2024-25-ம் ஆண்டுக்கான சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதில் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி இடம்பெற்றிருக்கிறது.
வேலூர் சத்துவாச்சாரி பிரசித்தி பெற்ற ஸ்ரீ சாலை கெங்கைம்மன் ஆலயத்தில் 21.4.2023 இன்று காலை 7.30 மணி முதல் 9.மணிக்குள்
ஸ்ரீ வராஹி அம்மன் பிரதிஷ்டை நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்றனர், இதற்கு முன்பு வராகிய அம்மனின் அருளை பெற சுற்றுவட்டாரப் பகுதிகளில் சென்று தரிசிக்க வேண்டி இருந்தது. இதன் மூலம் பக்தர்கள் மகிழ்ச்சி.
வேலூர் மாவட்டத்தில் நேற்றை விட நேற்று வெயில் அளவு சற்று குறைந்து காணப்பட்டது. நேற்று 107.4°F ஆக இருந்த வெயில் இன்று 106°F பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வேலூர் மாநகராட்சி காந்தி நகரில் அம்பேத்கர் சமூக சேவை அமைப்பு சார்பில் மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடந்தது.
இந்த நிகழ்வில் 120 ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கவுன்சிலர் ரீகன், அப்பு பால் பாலாஜி, கதிரவன்,சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் உள்ளிட்டோர் இருந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. அதிமுக சார்பில் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பசுபதி அவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்காக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறி வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். அதில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்து அதிமுக உறுப்பினர்கள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ சீனிவாசன் பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு நேற்றிரவு (ஏப்ரல் 19) ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் 1008 பாரம்பரிய நெய் தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ சீனிவாச பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வேலூர், அணைக்கட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையமான வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூமுக்கு தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ்குமார், கலெக்டர் சுப்புலட்சுமி முன்னிலையில் அதிகாரிகள் இன்று (ஏப்.20) பூட்டி சீல் வைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் நாளை (ஏப்ரல் 21) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது அதையும் மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (ஏப்.19) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.