Vellore

News May 24, 2024

வேலூர்: இன்று யோகா ஒருங்கிணைப்பு கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (மே 24) அரசு பள்ளிகளில் 9 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மன வளக்கலை மற்றும் யோகா பயிற்சி வழங்குவது தொடர்பாக ஸ்கை யோகா ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அருள்ஜோதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News May 24, 2024

வேலூர் கூட்டுறவு சங்கத்திற்கு பாராட்டு சான்றிதழ்

image

வேலூர் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டில் ஆட்சி மொழித்திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண ஐய்யப்பதுரைக்கு இன்று கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி. உடன் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் நாகராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News May 24, 2024

வேலூர் நில உரிமையாளர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

வேலூர் நவீன நகர நிலஅளவை திட்டப்பணியில் டிஜிபிஎஸ், இடிஎஸ் கருவிகளை கொண்டு இடையஞ்சாத்து கிராமத்தில் நில அளவீடு பணி 2019ம் ஆண்டு நடந்தது. ஆவணங்களில் உள்ள உரிமையாளர் பெயர், அளவு பரப்பில் உள்ள வேறுபாடு குறித்து ஆட்சேபனை தெரிவிக்க நோட்டீஸ் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் கிடைக்காதவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஜூன் 7ம் தேதிக்குள் பெறலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News May 24, 2024

வெளிநாடுகளில் உயர்கல்வி: வேலூரில் உதவித்தொகை

image

வேலூர் மாவட்டத்தில் 2024–2025ஆம் ஆண்டுக்கான முதுநிலை, முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி விண்ணப்பதாரர்கள் http://overseas.tribal.gov.in என்ற இணையதள முகவரியில் வருகிற 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்

News May 23, 2024

வேலூர் மாங்காய் மண்டியில் 1 டன் மாம்பழம் பறிமுதல்

image

வேலூர் மாங்காய் மண்டையில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் இன்று (மே 23)  உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது 2 கடைகளில் இருந்து ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட  ஒரு டன் அளவுக்கு மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.

News May 23, 2024

வாக்கு எண்ணும் பணி: அலுவலர்கள் தேர்வு

image

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர், குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி.குப்பம், ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்களை வேலூர் பெரியார் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4ஆம் எண்ணப்படவுள்ளன நிலையில் வாக்கு எண்ணும் அலுவலர்கள் 249, நுண் பார்வையாளர்கள் 111 ஆக 360 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

News May 23, 2024

காட்பாடி ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

image

கர்நாடகாவை சேர்ந்தவர் நவீன் (24). இவர் கடந்த 21ஆம் தேதி வேலூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு மைசூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடிக்கு வந்துள்ளார். அப்போது ரயில் புறப்பட்ட நேரத்தில் வேகமாக ரயிலில் இருந்து இறங்கினார். இதில் நிலைதடுமாறிய அவர் தண்டவாளத்தில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News May 23, 2024

வேலூரில் திருவிளக்கு பூஜை, தங்க ரதம் பவனி

image

வேலூர் வட்டம் கணியம்பாடி அடுத்த விநாயகபுரம் தம்டங்கோடி திருமலை முருகன் கோவிலில் முருக பெருமான் பிறந்த தினமான நேற்று வைகாசி விசாக திருவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன. முக்கிய நிகழ்வாக திருவிளக்கு பூஜை மற்றும் தங்க தேர் பவனி விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

News May 22, 2024

வேலூர் ஸ்ரீ புரத்தில் பௌர்ணமி சிறப்பு யாகம்

image

உலக நன்மைக்காகவும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று (மே.22) ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது. இதில், நாராயணி பீடத்தில் உள்ள பணியாளர்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

News May 22, 2024

பாதாள சாக்கடை திட்டப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

image

வேலூர் மாநகராட்சி கொணவாட்டம்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி இன்று ( மே 22 ) ஆய்வு செய்தார். குடிநீர் விநியோகம் தடைபடதாவாரு கூடுதல் பணியாளர்களை கொண்டு இரவும் பகலும் மீதமுள்ள பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். தேவைபட்டால் புதிய மாற்று குழாய்களை அமைக்கவும், பாதாள சாக்கடை திட்ட ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார்.

error: Content is protected !!