India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக அரசின் TANSIM இயக்கம், புதிய பிசினஸ் ஐடியா வைத்துள்ள இளைஞர்களுக்கு ₹10 லட்சம் வரை மானியம் (Seed Grant) வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஸ்டார்ட்-அப்களுக்கு நிதி உதவி மட்டுமன்றி, தொழில் வழிகாட்டுதலும் அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள தொழில்முனைவோர் <

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <

வேலூர் மக்களே.. தலைவலி, காய்ச்சல், தீக்காயம், உடல்நல அறிகுறிகள் உட்பட அனைத்து கேள்விகளுக்கும் உங்க WhatsApp-லேயே தீர்வு காண முடியும். <

வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நேற்று (ஜன.8) நடைபெற்றது. இந்த முகாமை கல்லூரி தலைவர் ரமேஷ் தொடங்கி வைத்தார். இதில் 182 மாணவர்கள் கலந்து கொண்டதில் 112 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கல்லூரியின் வேலை வாய்ப்பு அலுவலர் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மண்டலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வேலூரில் இருந்து சென்னைக்கு 40 பஸ்கள், பெங்களூருவுக்கு 10 பஸ்கள், ஓசூருக்கு 10 பஸ்கள், திருச்சிக்கு 5 பஸ்கள் உள்பட மொத்தம் 70 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்கள் வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையும், அதன் பின்னர் 17,18-ந்தேதிகளில் இயக்கப்பட உள்ளாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

வேலூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நாகராஜன் அரியூர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தற்போது வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணியிடம் கடந்த ஓராண்டுக்கு மேலாக காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் பிரபு தலைமையில் நேற்று (ஜன.8 ) போலீசார் மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கோட்டைச்சேரி கிராமத்தை சேர்ந்த விஸ்வா (27) மற்றும் லட்சுமணன் (24) ஆகியோரிடம் இருந்து 90 கர்நாடக மாநில மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மேலும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

வேலூர் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜன.8) மாலை சிமெண்டு மூட்டைகளை ஏற்றி சென்ற மினி வேன் சாலை நடுவே உள்ள தடுப்புக்கம்பியின் மீது மோதி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதனால் மினி வேனில் இருந்த சிமெண்டு மூட்டைகள் சாலையில் சிதறின. உடனே பின்னால் வந்து கொண்டிருந்த கார், கவிழ்ந்து கிடந்த மினி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.