Vellore

News June 7, 2024

வேலூர் மாவட்டத்தில் 36, 705 பேர் தேர்வு எழுதுகின்றனர்

image

வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய 6 மையங்களில் வரும் (ஜூன் 9)ம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெற உள்ளது.  இதில் மொத்தம் 36, 705 தேர்வாளர்கள் தேர்வை எழுத உள்ளனர். தேர்வு மையங்களுக்கான முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதோடு தேர்வுக்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News June 7, 2024

வேலூர் மாவட்டத்தில் 163.20 மிமீ மழைப்பொழிவு

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூன் 6)  பேரணாம்பட்டில் அதிகபட்சமாக 43.40 மிமீ மழை பதிவானது. ஒடுகத்தூரில் 7.10 மிமீ மழையும், குடியாத்தம் மோர்தனாவில்  32.00 மிமீ, கே.வி.குப்பத்தில் 4.2 மிமீ, காட்பாடியில் 5 மிமீ மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 163.20 மிமீ மழைப்பொழிவு பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News June 7, 2024

வேலூர்: கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

image

வேலூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 10.06.2024 முதல் 01.07.2024 அன்று வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 1,78,500 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் கால்நடைகளுக்கு  கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்

News June 7, 2024

வேலூரில் நீட்: அரசு பள்ளி மாணவர்கள் 41 பேர் தகுதி

image

வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 267 மாணவ மாணவிகள் நீட் தேர்வில் பங்கேற்றனர். அவர்களின் 41 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். மருத்துவ படிப்புக்கான தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இந்த மாணவர்கள் தகுதிபெற்றனர் . அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எத்தனை பேருக்கு சீட் கிடைக்கும் என்ற விவரம் மருத்துவ படிப்பு கவுன்சிலிங்கிற்கு பிறகு தெரியவரும் என்று கூறினர்.

News June 7, 2024

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5‌% ஒதுக்கீடு

image

மாற்றுத்திறனாளிகள் நல உரிமைச் சட்டத்தின்படி உயர்கல்வியில் பயில விரும்பும் கை, கால், குறைபாடு அமில வீச்சில் பாதிக்கப்பட்டோர், தடை சிதைவு நோய், கண்பார்வை இன்மை, குறை பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு உள்ளிட்ட 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித தடையும் இன்றி விரும்பும் பாடப்பிரிவில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் 5% ஒதுக்கீட்டினை முழுமையாகப் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

வேலூர்: மழைக்கு வாய்ப்பு

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (07.06.24) மதியம் 1 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூரில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 7, 2024

வேலூர் கடந்த 5 மாதத்தில் 338 பேர் கைது

image

வேலூர் மாவட்டம் முழுவதும் 5 மாதத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 1,21,765 லிட்டர் சாராய ஊறல், 11,821 லிட்டர் சாராயம், 16,361 மதுபாட்டில்கள், 200 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 58 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 1,926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மொத்தம் 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்‌. அதில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது என எஸ்பி மணிவண்ணன் தெரிவித்தார்.

News June 7, 2024

வேலூர் எம்பி, எம்எல்ஏ அலுவலகம் இன்று திறப்பு

image

மக்களவை தேர்தல் தேதி மார்ச் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. இதனால் குறை தீர்வு கூட்டம் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. வாக்கு எண்ணிக்கை கடந்த 4ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தல் நடத்தை விதிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன. இதையடுத்து வேலூரில் எம்பி, எம்எல்ஏ, மேயர், நகராட்சி தலைவர்கள் அறைகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.

News June 7, 2024

ரேஷன் கார்டு: வேலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வரும் பாமாயில், துவரம் பருப்பு சில குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த மே மாதம் வழங்கப்படவில்லை. அவர்கள் அந்த பொருட்களை இந்த மாதத்தின் (ஜூன்) முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (ஜூன் 6) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

வேலூர் எம்பி கனிமொழியிடம் வாழ்த்து

image

நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இந்தியா கூட்டணி திமுக சார்பில் நின்று வேலூர் மக்களவைத் தொகுதியில்‌ போட்டியிட்டு மீண்டும் அமோக வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழியை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (ஜூன் 6) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

error: Content is protected !!